December 5, 2025, 11:42 PM
26.6 C
Chennai

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!

Yogeswaran srilanka mp - 2025

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை என்று இலங்கை எம்பி பேசியுள்ளார்.

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்கள் என்று கூறிக்கொள்ள அருகதையற்றவர்கள் என்று இலங்கை எம்பி யோகேஸ்வரன் பேசியுள்ளார்.

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அவர் பேசிய போது, இந்தியா என்பது இந்து மக்கள் ராஜ்ஜியம். இதை யாரும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. இலங்கையின் ஆன்மீகத்திற்கு அஸ்திவாரம் இட்டது தமிழகம்! ஏனென்றால் இலங்கை ஒரு சிவ பூமி. இலங்கையில் ஆன்மிகம் வளர்ந்திருப்பது போல தாய் மண்ணான தமிழகத்திலும் ஆன்மிகம் மேலோங்கி இருக்கிறது. ஆறுமுக நாவலர், திருமூலர் ஆகியோர் இலங்கையை சிவபூமி என்று அழைத்தனர்

கடந்த காலங்களில் மத, இன ரீதியாக ஒன்றுபட விநாயகர் சதுர்த்தி விழா உதவி இருக்கிறது. மக்கள் எல்லோரும் நாங்கள் இந்து என்ற உணர்வோடு வாழ முற்பட வேண்டும். ஓர் இந்து எல்லா மத மக்களிடத்திலும் பற்றுள்ளவராக இருந்தாலும் சொந்த மதத்திலும் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!

இலங்கையில் இந்துக்கள் எப்போதும் இந்து சமயப் பற்றாளராக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. அங்கு அரசியலை நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இருக் கிறார்கள். இந்து என்றால் சைவத் தின் உள்ளடக்கம்.

சைவம் என்றால் தமிழ்; தமிழர் என்றால் சைவர்கள்! தமிழகத்தில் நாத்திகம் பேசுபவர்கள் தமிழர் என்று தங்களைக் கூறிக் கொள்ள அருகதை அற்றவர்கள்! இவர்கள் நாத்திகம் பேசிக்கொண்டு நாங்கள் தமிழர்கள் என்று வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

சகோதர மதத்தைச் சேர்ந்தவர்கள் இனத்தையும், மதத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் தங்கள் மதத்தைக் கொச்சைப் படுத்த மாட்டார்கள். ஆனால், இந்து மதத்தில் இதுபோன்ற நிலை உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகமாக உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் இந்து மதம் தழைத்தோங்க வேண்டும். ” என்று யோகேஸ்வரன் பேசினார்.

தமிழகத்தில் யார் தமிழர்கள் என்று தாங்கள் தான் சான்றிதழ் வழங்குவோம் என்று சில அமைப்புகளும் இயக்கங்களும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது, இலங்கை எம்.பியின் “தமிழர்கள் யார்” பேச்சு, அந்த அமைப்புகளின் முகத்தில் கரி பூசியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories