நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்களுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி பரபரப்பு.!

DMK CPI CPM 25 - 2026

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிகளான சிபிஎம் கட்சிக்கு ரூ.15 கோடி, சிபிஐக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.25 கோடி திமுக வாரி வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களுக்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 39 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த அதிர்ச்சியான தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவின விவரங்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

நாடாளுமன்ற தேர்தல் செலவிடம் தொடர்பாக திமுக தலைமை கடந்த மாதம் (ஆகஸ்டு) 27ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் ஒன்றை சமர்பித்தது.

அதில், சிபிஎம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், சிபிஎம்மிற்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சிபிஎம் சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி என்று கூறப்பட்டு உள்ளதாக தககவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிபிஐ சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை.

திமுக வழங்கியாக கூறப்படும் நன்கொடை குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநில பிரிவின் மூலம் பெறப்பட்ட விவரங்களை மத்திய குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும், அடுத்த பிரமாண பத்திரத்தில் அந்த விபரங்கள் குறித்து தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், நாங்கள் பெற்ற பணம் ஊழல் பணமல்ல. தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் உதவினர், இது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்து உள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,

திமுக நிர்வாகி ஒருவர், இதுபோன்று நிதி வழங்கப்படுவது தேர்தல் சமயத்தில் நடைபெறும் வழக்கம் என்றும், இந்தமுறை அந்த விவரங்களை திமுக தேர்தல் செலவினங்களில் சேர்த்துள்ளது என்று கூறினார்.

மேலும் திமுக தாக்கல் செய்த செலவின பிரம்மான பத்திரத்தில்,

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ. 58.94 லட்சமும்,

ஊடகங்கள் வாயிலான பிரசாரத்திற்கு ரூ. 15.46 கோடியும் செலவாக காட்டியுள்ளது.

மேலும், நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் செலவு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களி லும் கடும் விவாதப்பொருளாகி வருகிறது.

உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் ரூ.15 கோடி, ரூ.10 கோடி என பணம் வாங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories