சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட் வீரரை போல் வெள்ளை நிற பேண்ட், சர்ட், தொப்பி அணிந்திருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீசினார்.
இந்த வயதிலும் அதை லாவலகமாக அடித்து தூக்கினார். அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இந்த போட்டி குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம்.
மன அழுத்தத்தை போக்க விளையாட்டு அவசியமானதொன்று என்று அவர் தெரிவித்தார். முதல்வர் கிரிக்கெட் விளையாடியதை அங்கிருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோர் அவ்வப்போது பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கும்போது அந்த விளையாட்டுகளை விளையாடி தொடங்கி வைப்பது வழக்கம். அது போல் முதல்வரும் கிரிக்கெட் விளையாடினார்.