பெண்களை மதிக்கும் பாரத பிரதமர்: மாற்றுத்திறனாளி பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய தகைமை!

pm 2 - 2026

சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னை நேரில் சந்திக்க வந்த ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு கடந்த 13-ம் தேதி சென்றிருந்தார்..

மேலும் வாரணாசியில் காசி விஸ்வநாத் வளாக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஷிகா ரஸ்தோகி என்ற மாற்றுத் திறனாளிப் பெண் வந்திருந்தார்.

அந்தப் பெண்ணைப் பார்த்த பிரதமர், அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது அந்த பெண், பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக அவரின் காலில் விழுந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை தடுத்த நிறுத்திய மோடி, ​​அந்தப் பெண்ணின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு வணங்கினார்.

உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர், மாற்றுத் திறனாளி ஒருவரின் பாதங்களைத் தொட்ட காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

pm 1 1 - 2026

பிரதமரின் இந்த செயலால் நெகிழ்ந்து போன அந்த பெண், பிரதமருக்கு தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். இதையடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்த பெண்ணுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பெண்ணின் காலில் விழுந்த பிரதமரின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த வகையில், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார்.. மேலும் ” இது “அனைத்து பெண்களுக்கும் கிடைத்த மரியாதை. நமது பிரதமர் நரேந்திர மோடியால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே ஷிகாவின் சகோதரர் விஷால் ரஸ்தோகி கூறுகையில், ”என் சகோதரியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வீட்டில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories