சாராயம் குடித்து விட்டு அட்டகாசம் செய்த 🐘..

குடியாத்தம் அருகே சாராயம் குடித்து விட்டு அட்டகாசம் செய்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக, வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்த்தானா காப்புக்காடு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் யானைக் குட்டி ஒன்று வந்தது. திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

இன்று அதிகாலை குடியாத்தம் அருகே, குண்டக்கல் வனப்பகுதிக்குள் கங்கா ஓடையில் தண்ணீர் குடிக்க சென்றது. அங்கு சாராய வியாபாரிகள் பிரமாண்டமான அடுப்பு, பானைகள் வைத்து ஊறலில் வெல்லத்தை போட்டு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். சாராய வாசனையை நுகர்ந்து அந்த இடத்திற்கு வந்த யானையை பார்த்ததும் சாராய வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

சாராய அடுப்பை உடைத்த யானை, தண்ணீர் என நினைத்து பானைகளில் இருந்த சாராய ஊறலை குடித்தது. இதனால் போதை தலைக்கேறிய யானை சாராய வியாபாரிகளை விரட்டிச் சென்றது. பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிக்குள் யானை நுழைந்தது.
பள்ளியில் இருந்த மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள், ஆசிரியர்கள் அலறினர். பள்ளியில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்த யானை மாணவர்களுக்கு வைத்திருந்த தண்ணீரை குடித்து விட்டு, அவர்களை ஒன்றும் செய்யாமல், குடியாத்தம் நெடுஞ்சாலை வழியாக வனத்துறை ஓய்வு விடுதிக்குள் நுழைந்தது.

அங்கு துாங்கிக் கொண்டிருந்த வனச்சரகர் சதீஷ்குமார், வனக்காவலர் ரவி, காப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் யானையை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு தப்ப முயன்றனர். மது போதையில் யானை பிளறிக் கொண்டே அவர்களை விரட்டியது. அங்கு வந்த பொது மக்கள், வனத்துறையினர் சேர்ந்து இரண்டு மணி நேரம் போராடி பட்டாசு வெடித்து யானையை மாமரத்து பள்ளம் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
போகும் போது, தேன்மலையை சேர்ந்த விவசாயி கமலநாதன், 55, நிலத்திலிருந்த நெற்பயிர், பால்சுனை சுப்பிரமணிக்கு சொந்தமான வாழை தோட்டம், பாபுவின் கரும்பு தோட்டம், பம்பு செட்டுக்களை நாசம் செய்தது. பள்ளம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை உடைத்து விட்டு சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது,கங்கா ஓடையில் சாராய வியாபாரிகளால் தயார் செய்து கொண்டிருந்த சாராய ஊறலை யானை குடித்துள்ளது. போதை அடங்க ஒரு வாரமாகும். அதுவரை இப்பகுதியில் உள்ள பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். அதே சமயம் மது விலக்கு போலீசார் செய்ய வேண்டிய வேலையை யானை செய்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

mcms 3 - 2026
images 64 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories