spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அமைச்சர் ஜெயக்குமார் (?) பெண்ணின் கர்ப்பம் கலைக்கச் சொல்லும் வைரல் டாக்...!

அமைச்சர் ஜெயக்குமார் (?) பெண்ணின் கர்ப்பம் கலைக்கச் சொல்லும் வைரல் டாக்…!

- Advertisement -

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக வெளியான ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜெயக்குமார் பெயரை தாங்கிய பிறப்புச் சான்றிதழ் நகல் ஒன்றும் வைரலாகி வருவது மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் தொலை பேசியில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், அப்பெண் சிபாரிசு கேட்டு வந்த தனது மகளை ஜெயக்குமார் கர்ப்பமாக்கி விட்டதாக கூறுகிறார். இதுகுறித்து ஜெயக்குமாரிடம் அப்பெண் கூறிய போது அந்த குழந்தையை கலைத்து விடுமாறு ஜெயக்குமார் கூறுகிறார்.

தொடர்ந்து அந்தப் பெண் தனது வீட்டில் இருக்கும் ஆண்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுகிறார். அவர்களை எல்லாம் அழைத்துவர வேண்டாம், தனியாக வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இந்நிலையில் அந்த குழந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருப்பவர் ஜெயக்குமார். அமைச்சர், சபாநாயகர் என அரசு பதவிகளிலும் இருந்து வருபவர். இவர் சிந்து என்ற பெண்ணுடன் பல ஆண்டுகளாக ரகசிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது #Metoo இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அமைச்சர் பற்றிய இந்த தகவல் பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இதுகுறித்து ஜெயக்குமார் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

வைரலாகும் அந்த ஆடியோ…

இது குறித்த நமது பார்வை…

பெண்கள் பாதுகாப்புக்காகப் பயன்படும் சட்டங்கள் பல (வரதட்சனை / பாலியல் வன்முறை போன்றவை) ஆண்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ஜெயக்குமார் உரையாடல் என்றொரு ஆடியோ உலவிட்டிருக்கு. அது அவர் குரல் தானா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. அந்த ஆண் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அந்த உரையாடல் தொடர்பான நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரிகிறது.

அந்தத் தாய் தன் மகளைக் கூட்டி(ட்டுப் போய்) கொடுத்திருக்கிறார் அந்த ஆணிடம். ஏதோ தேவைக்காக தன் மகளை அமைச்சரிடம் கூட்டிட்டுப் போயிருக்கிறார். காரியம் முடிச்சுக் கொடுக்க, திருமணமாகாத பெண்ணின் உடலைக் கேட்டிருக்கிறார். ஒன்றிற்கும் மேலான முறை கலவு நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பெண் கர்ப்பமாகியிருக்கிறாள். கலைக்க பணமும் கொடுத்திருக்கிறார் அமைச்சர். பின் இதை வைத்து பெரிதாகப் பணம் பண்ண அந்தத் தாயும் அவர்கள் உறவினரும் சேர்ந்து திட்டமிட்டிருக்கின்றனர்.

உதவி கேட்க வந்த பெண்ணின் உடலைக் கேட்டது கீழ்த்தரமானது. உன்னை அமைச்சராக்கி அதிகாரம் கொடுத்தால் அதையே உன் சதைப் பசிக்கு அதே மக்களை இரையாக்குவது துரோகம். வேற பேச்சு மயிரெல்லாம் பேசாம அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறி பிரச்சினையை சந்தி.

அமைச்சரிடம் உதவி கேட்டுப் போனாய் சரி! உதவிக்கு பதில் உன் மகளின் உடம்பைக் கேட்டிருக்கிறான். நல்ல தாய் என்ன செய்திருக்கணும்? அவன் முகத்தில் காறித் துப்பிட்டு கிளம்பியிருக்கணும். அதை விட்டுட்டு அமைச்சர் தன் மகளை வச்சுக்குவான். நாமளும் சொகுசா வாழலாம்னு விளக்குப் புடிச்சுட்டு , அப்புறம் அதையே சாக்காக வச்சுக்கிட்டு காசு பறிக்கத் திட்டமிட்டு பேசினதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணும் அளவுக்கு செயல்பட்டிருக்கிறாயே…? அதுக்கு பதிலா பேசாம உன் பொண்ணை வைத்து நேரடியா தொழிலே பண்ணியிருக்கலாம்!

உங்களை மாதிரியான ஆட்களால் தான் இங்கே நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்து நியாயம் கேட்க கூசி ஒளிந்து கொள்கிறார்கள். கருமம் புடிச்ச நாய்க!

– ஆனந்தன் அமிர்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe