ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள்… பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிக்கும் ‘பிரபல ஹாலிவுட் ஹீரோ’ சித்தார்த்!

actor siddharth - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நடந்த இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் குறித்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

ஒரு கூட்டத்தில் பேசிய போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.

உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க் கட்சிகளோ என்னை ஒழித்துக் கட்ட சதி செய்கின்றன’ என்று உள்ளதை, உண்மையை, நாட்டு நடப்பைக் குறித்துப் பேசினார்.

மோடி கூறிய எதிர்க் கட்சிகளின் சதிக்கு உடந்தையாகத் திகழ்வது போல், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சித்தார்த் டிவிட்டர் பதிவில் கருத்து கூறியுள்ளார்.

மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.

பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

இவரது கருத்து ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப் பட்ட போது, யார் இந்த சித்தார்த் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர் பலர்.

மோடிக்கு எதிராக எந்தப் பொடியன் வாய் திறந்தாலும் அவனை ஹீரோ அளவுக்கு ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றன என்று குற்றம் சாட்டும் பலர், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் அரசியல் பேசுவது நிறுத்தப் பட வேண்டும் என்று ஒட்டுமொத்தக் குரலில் கூறுகின்றனர்.

கற்பனைகளை மட்டுமே காட்சிப் படுத்தும் சீமான் போன்றவர்களால், மிகவும் சீரியஸாக இருக்க வேண்டிய அரசியல் களத்தில் காமெடி மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது என்றும், அதனால் மக்களின் எதிர்காலம் பாழாகிறது என்றும் கூறுகின்றனர்.

இயக்குனர்கள் சொல்படி படத்தில் நடித்துவிட்டுப் போகும் நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு நாங்கள் காரணம் என்பார்களா? அல்லது கதை அம்சம் கருத்து, காட்சிகள், கற்பனை எல்லாவற்றுக்கும் இயக்குனர் சொந்தம் கொண்டாடுவாரா? ஒரு வேளை இயக்குனர் ஒரு படத்தின் வெற்றிக்குத் தானே காரணம் என்று சொன்னால்… அதே மேடையில், ஹீரோவாக நான் நடித்ததே பட வெற்றிக்குக் காரணம் என்று நெஞ்சு நிமிர்த்தி பதிலடி கொடுப்பாரா சித்தார்த் என்று கிண்டலடிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories