விலைவீழ்ச்சியை சமாளிக்க வாழையை வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்த வசதி தேவை: பொங்கலூர் மணிகண்டன்

Published:

வாழை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் வாழையை சந்தைப்படுத்த தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வாழை விலை சரிவால் ஏற்படும் ஈழப்பீட்டை ஒரளவு தடுக்கலாம் என உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் வாழை விலை தடாலடியாக குறைந்ததால் வாழை விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாழை விவசாயிகள் அவர்களது துயரத்தை துடைக்கும் வகையில் மத்திய அரசு, மாநில அரசும் வெளிமாநிலங்களில் வாழையை சந்தைப் படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மேலும் இதற்கென குளிரூட்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விலையில்லா நாட்களிலும் வாழையை மொத்தமாக அந்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியில் பாதுகாத்து விலை இருக்கும் நேரத்தில் வாழையை விற்பனை செய்தால் இந்த விலை வீழ்ச்சியை வாழை விவசாயிகளுக்கு ஏற்படும் ஈழப்பீட்டை ஈடு செய்யலாம் என்றும் உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img