சென்னை: டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகி றார். இதேபோல் நேற்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு தனது தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரையும் மெரினா காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற போதும், பிப்ரவரி 22-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைதானமை குறிப்பிடத்தகக்து.
சென்னை டி.ஜி.பி அலுவலகம் அருகே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!
Published:

