வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

marriage kalyanam - 2026

எதிர்வரும் வைகாசி மாதம் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதம் மலமாதம் என்றும் அதில் திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்றும் சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுவதோடு அம்மாதத்தில் முகூர்த்தங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் நமது சபரி பஞ்சாங்கத்தில் அதற்கு விதிவிலக்கு உண்டு என்று சொல்லி வைகாசியில் முகூர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சில ஜோதிடர்கள் அந்த விதிவிலக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது போல் பேசி வருகிறார்கள். அதுபற்றி விளக்கம் தருவதற்காகவே இந்தப்பதிவு.

மலமாதம் (அ) அதிமாதம் என்றால் என்ன?

ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு அதிமாதம் என்று பெயராகும். ஒருமுறை இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டால் அதற்குப்பின் 2 வருடம் 8 மாதம் 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டு அமாவாசைகள் ஏற்படும். இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. உண்மையில் இதற்கான விதிகள் என்ன? விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா என்பதைப் பார்ப்போம்.
marriage - 2026

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

முஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள விதிகள்.

1. ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு அதிமாதம் என்று பெயராகும். அதில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. ஆனால் சித்திரை வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.

2. இரண்டு அமாவாசையோ அல்லது இரண்டு பௌர்ணமியோ ஏற்படும் மாதத்தில் ஏதேனும் ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அந்த மாதத்திற்கு மல மாத அதிமாத தோஷம் கிடையாது.

3.சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலோ சுபக்கிரக நவாம்சத்தில் இருந்தாலோ அதிமாச மலமாச தோஷம் இல்லை.

மேலே சொல்லப்படுள்ள விதிகளில் இரண்டு விதிகள் வருகின்ற வைகாசி மாதத்திற்கு பொருந்தி வரும். இதில் முதல் விதியில் சொல்லப்பட்டுள்ளபடி அது வைகாசி மாதம் என்பதால் தோஷமில்லை. இந்த விதி காலவிதான பத்ததி 226 வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன் நகல் (வடமொழி ஸ்லோகம் மற்றும் அதன் தமிழ் விளக்கம்) இங்கே கொடுத்திருக்கிறேன். மேலும் திரு.சி.ஜி.ராஜன் அவர்களால் உரை எழுதப்பட்ட காலவிதானம் நூலில் 195 வது பாயிண்டாக இந்த விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் நகலும் இங்கே இணைத்திருக்கிறேன்.

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.

இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

இந்த அதிமாத தோஷம் நமது தமிழ்நாட்டிற்கே கிடையாது என்பது தான். இந்த தோஷம் சோணா நதிக்கு வடக்கே இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே உண்டு.

சோணா நதியா? அது எங்கே ஓடுகிறது?
சோணா நதியானது மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி பாய்ந்து மன்பூர் என்ற இடத்தில் வடகிழக்காகத் திரும்பி பாட்னா அருகில் கங்கையில் கலக்கிறது. ஆக இந்த அதிமாத தோஷமானது மத்திய பிரதேசத்திற்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு தெற்கே உள்ள தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.

எனவே யாரும் எவ்வித குழப்பமும் கவலையும் படாமல் வைகாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சகல சுபகாரியங்களையும் தாராளமாகச் செய்யலாம்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories