மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

suvendhu adhikari take oath as west bengal cm - 2026

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பாஜக., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதை அடுத்து, பாஜக., ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்எம்ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதை அடுத்து பா.ஜ., சார்பில் ஆட்சி செய்யும் மேற்கு வங்க முதல் முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

55 வயதாகும் சுவேந்து அதிகாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன். வங்காள பிராமணர் வகுப்பைச் சேர்ந்த  சுவேந்து அதிகாரி, அவ்வகையில் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர். தொடக்க காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணமுல் காங்கிரஸில் நடைபெறும் தில்லுமுல்லுகள், தேசியச் சூழலுக்கு எதிராக மம்தா நடந்து கொள்வது போன்றவற்றால் அதில் இருந்து வெளியேறி, 2020 டிசம்பரில் பாஜக.,வில் இணைந்தார். கடந்த 2021 தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து தேசிய அரசியலில் கவனம் பெற்றார்.

தற்போதைய 2026 தேர்தலில், தனது சொந்த தொகுதியான பவானிபூரிலேயே மம்தாவைத் தோற்கடித்துள்ளார் சுவேந்து அதிகாரி. மம்தா இங்கே தோற்றது திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக., மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதியது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பாஜக., தலைமை அலுவலகத்தில், புதிதாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சுவேந்து அதிகாரி, பாஜக., சட்டசபைக் குழு தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின், லோக்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருக்கு, ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் கோல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரிகேட் மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில், மேற்கு வங்கத்தின் ஒன்பதாவது முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து, பாஜக., மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் அமைச்சராக பதவியேற்றார். அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும், அன்றைய தினமே முதல் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக.,வின் வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு, விழா மேடையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நன்றி தெரிவித்தார். பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, பாஜக., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்கும் விதமாக மேடையில் மண்டியிட்டு வணங்கியபோது, பொதுமக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

மேடையில் 90 வயது பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காருக்கு மரியாதை செய்த பிரதமர் மோதி:

பிரதமர் நரேந்திர மோதி, பிரிகேட் பரேட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் 90 வயதான மூத்த பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காரின் கால்களைத் தொட்டு வணங்கி நாட்டுக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். அவர் மக்கன்லால் சர்க்காரை அணைத்து, அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை உணர்வுப் பூர்வமாகக் கௌரவித்தார்.

மக்கன்லால் சர்க்கார் தனது வாழ்நாள் முழுவதும் பாஜகவுக்காகப் பாடுபட்டு வந்தவர். அவர் தடியடிகளையும், சிறை வாசத்தையும், மம்தா பானர்ஜியின் குண்டர்களின் பயங்கரவாதத்தையும் சகித்துக்கொண்டார்.  ஆனாலும் அவர் ஒருபோதும் தலைகுனியவில்லை.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதிகார போதையில் மூழ்காமல், ஒரு தொண்டரின் கால்களைத் தொடும் தலைவர் இவர். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும் தொண்டர்களைத் தொடர்ந்து நசுக்கி, அடித்து, அச்சுறுத்தி வரும் வேளையில் இது போன்ற செயல்கள் தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. பாஜகவில் தொண்டரே உண்மையான ராஜா என்ற செய்தியை இது வெளிப்படுத்துகிறது. கட்சிக்காக இரவும் பகலும் அனைத்தை யும் தியாகம் செய்பவர்களை மோதியும் பாஜகவும் ஒருபோதும் மறப்பதில்லை. உண்மையான அரசியல் என்பது சேவை யையும் மரியாதையையும் பற்றியது என்பதை மோதி நிரூபித்து வருகிறார். 

மக்கன்லால் சர்க்கார் போன்ற கோடிக் கணக்கான தொண்டர்களின் தியாகங்க ளால்தான் இன்று வங்காளத்தில் தாமரை மலர்ந்துள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories