வென்னிமலையில் சூரசம்ஹாரம்

Published:

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது
 காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சஷ்டி ஹோமம், தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை முருக பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து பக்தர்கள்  செய்திருந்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img