December 6, 2025, 5:41 AM
24.9 C
Chennai

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”

( ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது ‘ என்று விதியை மீறாமல் மரபைக் காத்த பெரியவா)

( துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது. )

‘தர்ஷன்’. இதழிலிருந்து.
தொகுப்பாளர்; டி.எஸ்.கோதண்டராம சர்மா 61756834 2517068251854066 7432222991972302848 n 1 - 2025
தட்டச்சு; வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள் இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும் துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு காலை வேளை. அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த போது அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார். எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் – சிக்கல் – பிரச்னை பெரியவாளிடம் தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார். கண்கள் கெஞ்சுகின்றன – ; என்மீது தங்கள் அருட்பார்வை படட்டுமே!’ என்று உதடுகள் துடிக்கின்றன. ‘நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று. அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே விரும்பினார்.

‘ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது’ என்று விதி தடுக்கிறதே?.

அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான் காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை பெரியவா அழைத்தார்கள்.

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

“ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக்கூப்பிடு. அவர் திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்..”

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில் ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய ஒருவரையே, “பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி நில்லு…..போதும்” என்று சொல்லிஅழைத்து கொண்டு வந்து விட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும் அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே, செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று. அம்மையாரின் கண்களில் நீர்…. ஆமாம். ஆனந்தக் கண்ணீர்!

பிறை சூடிஅல்லவா, அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும் செவிடரிடம் ஒரு ஜாடை; ‘நீங்களும் போகலாம்’

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories