“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”

( ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது ‘ என்று விதியை மீறாமல் மரபைக் காத்த பெரியவா)

( துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது. )

‘தர்ஷன்’. இதழிலிருந்து.
தொகுப்பாளர்; டி.எஸ்.கோதண்டராம சர்மா 61756834 2517068251854066 7432222991972302848 n 1 - 2026
தட்டச்சு; வரகூரான் நாராயணன்.

சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள் இருக்கின்றன. அதிலும் பீடாதிபதியாக வீற்றிருக்கும் துறவிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு காலை வேளை. அன்றைக்கு அடியார் கூட்டம் அவ்வளவாக இல்லை.

மகாப் பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த போது அலங்காரம் செய்யப்படாத அம்பாள் போல ஒரு சுமங்கலி வந்தார். நேரே பெரியவாளிடம் சென்று நமஸ்கரித்தார். எழுந்தவர் கண்களில் குபுகுபு வென்று நீர் மல்கியது.

சொந்த விவகாரம் – சிக்கல் – பிரச்னை பெரியவாளிடம் தனிமையில் பேசி வழிகாட்டுதலை எதிர்நோக்கி நிற்கிறார். கண்கள் கெஞ்சுகின்றன – ; என்மீது தங்கள் அருட்பார்வை படட்டுமே!’ என்று உதடுகள் துடிக்கின்றன. ‘நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று. அருளரசர் அந்த அம்மையார் சொல்வதைக் கேட்கவே விரும்பினார்.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 30 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

‘ஒரு பெண்ணிடம் தனியாகப் பேசக்கூடாது’ என்று விதி தடுக்கிறதே?.

அம்மையார் இடத்தை விட்டு நகராமல் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து நகர்ந்தால்தான் காத்துக்கொண்டிருக்கும் மற்ற அடியார்கள் பெரியவா அருகில் செல்ல முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலை எத்தனை நேரம்தான் நீடிப்பது?

விரல் சொடுக்கில், ஓர் அணுக்கத் தொண்டரை பெரியவா அழைத்தார்கள்.

“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”

தொண்டர் அதிருஷ்டசாலி! சில விநாடிகளிலேயே ஒரு செவிடரைக் கண்டுபிடித்து விட்டார்.

“ஒரு காரியம் செய்.அந்த அம்மாளுடன் அவன் வரும்போது கையைத் தட்டி அவர் பெயரைச் சொல்லிக்கூப்பிடு. அவர் திரும்பிப் பார்க்கிறாரா? இல்லையா?-என்பதிலிருந்தே அவர் நிஜமான செவிடர்தானா என்பதைப் புரிந்து கொள்ளலாம்..”

(பெரியவாள் சொல்லிக் கொடுத்த இந்தத் தந்திரத்தில் ஒரு புதைபொருளும் இருக்கிறது)

தொண்டர் ஏதோ ஓர் அலுப்பில், காது கேட்கக்கூடிய ஒருவரையே, “பெரியவா முன்னாடி நீ செவிடன் மாதிரி நில்லு…..போதும்” என்று சொல்லிஅழைத்து கொண்டு வந்து விட்டால், குடும்ப ரகசியங்களைப் பேச விரும்பும் அம்மணிக்கு சங்கடமாகப் போய் விடக்கூடும். எனவே, செவிட்டுத்தனத்தை டெஸ்ட் செய்வதாக ஒரு யோஜனை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

டமாரச் செவிடர் பக்கத்தில் நிற்க தன் மனத்திலிருந்த ஆதங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தார் அம்மையார்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கருணாமூர்த்தி பிரசாதம் கொடுத்து, பெருமைப்படுத்தி அனுப்பிற்று. அம்மையாரின் கண்களில் நீர்…. ஆமாம். ஆனந்தக் கண்ணீர்!

பிறை சூடிஅல்லவா, அவருக்குப் பதில் கூறியிருக்கிறது.

அம்மையார் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டதும் செவிடரிடம் ஒரு ஜாடை; ‘நீங்களும் போகலாம்’

துறவு நெறி காக்கப்பட்ட அதே சமயத்தில், ஒரு சுமங்கலிக்கும் அருள்பாலித்தாகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories