திருவாவடுதுறை கோயிலில் புரட்டாசி கார்த்திகை சிறப்பு வழிபாடு!

Published:

thiruvadudurai1
thiruvadudurai1

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் புரட்டாசி காரத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் புரட்டாசி கார்த்திகை வழிபாடு நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி கார்த்தியை வழிபாடு நடந்தது.

திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடிய காவிரி தென்கரை தலங்களில் 36வது தலமாடும்தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்கள் இது 99வது தலமாகும் திரும. ண தடை நீக்கக் கூடிய தலமாகவும் இக்கோவில் சூரியன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.

thiruvadudurai2
thiruvadudurai2

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி கார்த்தியை சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நடந்த வழிபாட்டில் அரசின் கரோனா சட்டதிட்டங்களின்படி ஆகமப்படி அரசு உத்தரவுப்படி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சமுக இடைவெளியோடு புரட்டாசி கார்த்தியை வழிபாடு நடந்தது.

வழிபாட்டை முன்னிட்டு கோயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஒப்பிலாமுலையம்மை விநாயகர் முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்து உரிய நேரத்தில் உரிய வேத மந்திரங்கள் சொல்ல வள்ளி தேவசேனா முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகமும் மாலை 6 குருக்கள் கொண்டு 6 வகையான மலர்களால் சண்முகார்ச்சனை 6 வகை பழங்கள் நிவேதனம் செய்து 6 முகத்திற்கும் 6 பஞ்சாரத்தி தீபாரதனை நடந்தது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

வழிபாடு குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் திருமுன்னர் நடந்தது சன்னிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

Related articles

Recent articles

spot_img