ஆருத்ரா தரிசனம்

Published:

”தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே…”ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!”…..ஆருத்ரா
அபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்:

26-12-15…”திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்”

காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ தாண்டவ நடராஜருக்கு ஆருத்ரா அபிசேகம் 25-12-15 அன்று இரவு 10 மணிக்கு ஆரம்பித்து 26-12-15 அன்று அதிகாலை 5 மணி வரை நடைபெறும்

ஆருத்ரா தரிசனம் 26-12-15 அன்று காலை துவங்கி நடக்கும்.

காளியுடன் நடனம் ஆடிய ஈசனின் நடனத்தின் உச்ச நிலையைக் கண்ட அம்பிகை வியப்புடன்
“ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!…என்று கூறி அவரது ஆட்டத்தை வியப்புடன் நோக்கிய வண்ணம் இங்கு நடராஜபெருமானின் அருகில் சமிசீனாம்பிகை என்னும் பெயரில் உள்ளார்..

நடராஜபெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் காரைக்கால் அம்மையார் பாடிய வண்ணமும், ஈசன் ஆடிய வண்ணமும் இங்கு உள்ளது சிறப்பு..காரைக்கால் அம்மையார் இங்கு நடராஜருக்கு பின்புறம் உள்ள சுவர் எழுப்பிய சன்னிதியில் தற்போதும், சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதனை “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.. திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது;

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இது, ரத்தின சபை எனப்படுகிறது. இங்கு மூலவர் சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர்அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும்.பழையனூர் நீலி அம்மன் இத்தலமே…இங்கு முதலில் ஈசனை வழிபடும் முன்பு குளக்கரையில் உள்ள வடபத்திர காளிஅம்மனை வழிபட்டே ஈசனை வழிபடவேண்டும்..”சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட,அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”..”வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”.

கட்டுரையாக்கம்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்

Related articles

Recent articles

spot_img