இந்த அவசரமான உலகில் எல்லோரையும் அதிக மன அழுத்தமும்,மனக்குழப்பமும் தடுமாற வைக்கும்.
அலைபாயும் மனம்
சில நேரம் அதிக குழப்பத்தையும்,எதிர்மறை சிந்தனையையும் கொடுக்கும்.
பொதுவாக மனதை செயல்படுத்தும் கிரகம் சந்திரன் ஆகும்.
இவர்தான் நம் மனதை ஆட்கொள்பவர்.
மேலும் நம்முடைய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும்.
இதற்கு..,
ஒவ்வொரு திங்கள் கிழமை அதிகாலை குளித்து பூஜையறையில் அருகில் அமர்ந்து ”ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது நல்லதாகும் அதேபோல் பௌர்ணமி அன்றும் சொல்லலாம்.
சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
மேலும் சந்திரன் வலு குறைந்து இருப்பவர்கள், கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம்.
மேற்கண்டவைகளை செய்தால் மன அழுத்தமும்,மனக்குழப்பமும் படிபடியாக குறையும்.


