யுவராஜ்க்குப் பின் ப்ராட் பந்தில் அதிரடி காட்டிய பும்ரா!

bumrah shami - 2026

இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச்
– இரண்டாம் நாள் – 02 ஜூலை 2022
– K. V. பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 73 ஓவர்களில் 338/7 என்ற ரன் கணக்கோடு தொடங்கியது. ரவீந்தர் ஜதேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்திய அணி சுமார் 12 ஓவர்கள் இன்று விளையாடியது, ஜதேஜா 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் பத்தாவது விக்கெட்டுக்கு வந்த இந்திய அணியின் தலைவர் பும்ரா 84ஆவது ஓவரை மிகப் பிரமாதமாக ஆடினார். முதல் பந்து நான்கிற்குச் சென்றது; அடுத்த பந்து பும்ராவின் தலைக்கு மேலாகச் சென்று பவுண்டரியை அடைந்தது; அந்தப் பந்தில் மொத்தம் 5 ரன்கள்; அடுத்த பந்தினை ப்ராட் நோபால் போட்டார். பும்ரா அதனை சிக்சருக்கு அனுப்பினார்; அதனால் 7 ரன். அடுத்த மூன்று பந்துகள் பவுண்டரிக்கும், ஐந்தாவது பந்து சிக்சருக்கும் சென்றது. ஆறாவது பாலில் பும்ரா ஒரு ரன் எடுத்தார். ஆக, அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன் எடுக்கப் பட்டது. இது மிகப் பெரும் சாதனை.

இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆட களத்தில் இறங்கியது. மழையின் குறுக்கீட்டால் இங்கிலாந்து அணி 27 ஓவர் மட்டுமே விளையாடியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ப்ந்து வீசினர். பும்ரா 11 ஓவர்கள் வீசி, 35 ரன்கள் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். ஷமியும் சிராஜும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து ஐந்து விக்கட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories