T20-WC: அதிரடி காட்டிய ராகுல்! அசத்திய ஷமி!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – இரண்டாம் நாள் – 17.10.2022
மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டாஸ்மானியா ஹோபர்ட் மைதானத்தில் இன்று இரண்டு குரூப் B பிரிவு ஆட்டங்கள் நடந்தன.

முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி (20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன், முன்சி 66, மேக்டெண்ட் 23, ஜோன்ஸ் 20, அல்சாரி 2/28, ஜேசன் ஹோல்டர் 2/14) மேற்கு இந்தியத்தீவுகள் அணியை (18.3 ஓவரில் 118 ரன்கள், ஹோல்டர் 38, வாட் 3/12, வீல் 2/32, லீஸ்க் 2/15) 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பல ஆண்டுகளாக கிரிக்கட் ஆடிவரும் ஒரு அணி; இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணி; மேற்கு இந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றில் இருப்பதே ஆச்சரியமான விஷயம். அதிலே ஸ்காட்லாந்து போன்ற அணியிடம் தோற்பது என்பது எவ்வளவு அதிர்ச்சியான செய்தி.

நேற்று ஒரு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோற்றதுபோல மேற்கு இந்தியத்தீவுகள் அணியும் இன்று தோற்று விட்டது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ஸ்காட்லாந்து அணி வீரர்கள் நல்ல ரன் ரேட்டுடன் முதல் ஓவரில் இருந்து ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்தது.

ஸ்காட்லாந்து அணி விளையாடியபோது ஆட்டம் அரை மணி நேரத்திற்கு மழையால் தடைபட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தங்களுடைய வெற்றிக்கான தேடலை நன்றாகவே தொடங்கினர். அவர்கள் முதல் 5.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தனர். ஆனால் அடுத்த 26 ரன்களில் ஏழு விக்கட்டுகளை இழந்தனர்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் 12 ரன்கள் கொடுத்து மூன்று விக்கட் எடுத்தார். மைக்கேல் லீஷ் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். இதனால் மே.இ. தீவுகள் அணி 18.3 ஓவரில் 118 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தத் தோல்வி மே.இ.தீவுகள் அணிக்கு ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். இலங்கை, மே.இ. அணிகள் இரண்டுமே அடுத்த போட்டியை வெல்ல வேண்டும். அப்போதுதான் மேற்கொண்டு போட்டியில் இடம் பெறமுடியும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இரண்டாவது ஆட்டம் ஜிம்பாபே – அயர்லாந்து

இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாபே அணி (174/7, சிக்கந்தர் ராசா 82, மத்வீவீர் 22, ஜோஷ் லிட்டில் 3/24) அயர்லாந்து அணியை (143/9, கெம்பர் 27, டாக்கெரல் 24, டிலானி 24, முசர்பானி 3/23) 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

ஜிம்பாபே தொடக்கத்தில் தடுமாறியது. மூன்று விக்கட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் சிக்கந்தர் ராசாவின் அதிரடி ஆட்டத்தில் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 174 எடுத்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து அணி ஆடியது. ஆனால் அதன் ரன் ரேட் ஜிம்பாபே அணியின் ரன் ரேட்டைவிட மிகக் குறைவாகக் குறைவாக இருந்தது. இறுதியில் ஜிம்பாபே அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டம்: தன்னம்பிக்கை தந்த வெற்றி

இந்த இரண்டு ஆட்டங்களைத் தவிர மூன்றாவது ஒரு ஆட்டமும் இன்று நடந்தது. அது இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த பயிற்சி ஆட்டம். அதிலே இந்திய அணி முதலில் ஆடி 186/7 எடுத்தது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுப்போனது.
இதில் சிறப்பு என்ன வென்றால் இந்திய அணி 47/0 என்ற ஸ்கோரில் இருந்தபோது கே.எல். ராகுல் 47 ரன், ரோஹித் ஷர்மா ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் இருந்தார். ராகுல் அந்த மாதிரி ஒரு அதிரடி ஆட்டம் ஆடினார்.

சூரியகுமார் யாதவ் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 20 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக ஆடியது. இருப்பினும் 20ஆவது ஓவரில் முகமது ஷமி கடைசி நாலு பந்துகளில் நாலு விக்கட்டுகளை வீழ்த்தினார்; அதில் ஒரு ரன் அவுட். இந்த வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories