ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 17

          முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன் எடுத்தது. இந்த மொத்த ரன் கூட காமரூன் கிரீன் எடுத்த 79 ரன்னால் (55 பந்துகள், 7 ஃபோர், 4 சிக்சர்) சாத்தியமானது. அவருக்குத்து துணையாக ரோமன் போவெல் (27 ரன்) மற்றும் ரமன்தீப் சிங் (17 ரன்) சிறிது நேரம் கம்பனி கொடுத்தார்கள். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. குஜராத் அணியில் ரபாடா 3 விக்கட்டுகளும், ஷமி, அஷோக் ஷர்மா தலா இரண்டு விக்கட்டுகளும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன் எடுத்தார். இதில் 8 ஃபோர், 4 சிக்சர்கள் அடக்கம். சாய் சுதர்ஷன் 22 ரன், ஜாஸ் பட்லர் 25 ரன், வாஷிங்க்டன் சுந்தர் 13 ரன், கிளன் பிலிப்ஸ் 19 ரன் எடுத்தனர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இருபத்தியாறாவது ஆட்டம் பெங்களூரு vs டெல்லி – பெங்களூரு – ஏப்ரல் 18 முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அந்த அணியின் பில் சால்ட் (38 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. குறிப்பாக விராட் கோலி 19 ரன், தேவதத் படிக்கல் 18 ரன், ரஜத் படிதார் 8 ரன், டிம் டேவிட் 26 ரன், ஜித்தேஷ் ஷர்மா 14 ரன், க்ருணால் பாண்ட்யா 12 ரன் ஆகியொர் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி அணியில் நிகிடி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் கே,எல், ராகுல் (34 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (19 பந்துகளில் 26 ரன்), டேவிட் மில்லர் (10 பந்துகளில் 22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி அணி 179 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

இருபத்தியேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs சென்னை – ஹைதராபாத் – ஏப்ரல் 18 இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (22 பந்துகள், 6 ஃபோர், 4 சிக்சர்), ஹென்றி கிளாசன் 59 ரன் (39 பந்துகள் 6 ஃபோர், 2 சிக்சர்), ட்ராவிஸ் ஹெட் 23 ரன்னும் (20 பந்துகள், 3 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். சென்னை அணியின் அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜமி ஓவர்டன் இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 30 ரன்னும் (13 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்), மேத்யூ ஷாட் 34 ரன்னும் (30 பந்துகள், 3 ஃபோர்), சர்ஃப்ராஸ் கான் 25 ரன்னும் (19 பந்துகள், 3 ஃபோர்), ஷிவம் துபே 21 ரன்னும் (16 பந்துகள் 1 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். ஆயுஷ் மாத்ரே காலில் காயம் பட்டுக்கொண்டார். இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம். சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் 7 ரன் மட்டுமே எடுத்தார். ஹைதராபாத் அணியின் ஈஷன் மலிங்கா 3 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.   

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 19

          முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டக்காரர்களை அணியில் வைத்திருந்தும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் 39 ரன்னும் (29 பந்துகள் 4 ஃபோர், 2 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்னும் (28 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) எடுத்தனர். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. கொல்கொத்தா அணியின் கார்த்திக் தியாகி மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். கொல்கொத்தா அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் ரன் எடுக்காமல் முத்ல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு அதிரடி வீரர் ரகுவன்ஷியால் 19 பந்துகளில் 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் காமரூன் கிரீன் (27 ரன்), ரொவ்மென் போவெல் (23 ரன்), ரிங்கு சிங் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), அங்குல் ராய் (29 ரன்) சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories