உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் சவுதி அரேபியாவை வீழ்த்தி ரஷ்யா அபார வெற்றி

01 June15 foot ball - 2026

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்ய அணி, 5-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம், வெள்ளைப் பூனை அசிலிஸ் கணிப்பு பலித்துள்ளது.

உலகக்கோப்பையில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரஷ்ய அணி, முதல் லீக் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் களம் கண்ட ரஷ்யா, ஆரம்பம் முதலே தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதன் எதிரொலியாக, 12 நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து அலெக்ஸாண்டர் குளோவின் தூக்கி அடித்த பந்தை, கஸின்ஸ்கி தலையால் முட்டி கம்பத்திற்குள் தள்ளினார். இதன் மூலம், 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இதையடுத்து, 43-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் தடுப்பு அரணை கடந்து, லாவமாக பந்தை கடத்திச் சென்ற டெனிஸ் செரிஷேவ் அடுத்த கோல்-ஐ பதிவு செய்தார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

முதல் பாதியின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்ற ரஷ்ய அணி தொடந்து வேகம் காட்டியது. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் சவுதி அரேபிய வீரர்கள் திணறினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 71-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஆட்ட நேரத்தில் காலவிரயம் செய்யப்பட்ட நேரத்தை ஈடுகட்டும் வகையில், பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின், ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது. தோல்வி உறுதியானதால் சவுதி அரேபிய வீரர்கள் சற்று தளர்வாக காணப்பட்டனர். அதேவேளை, உற்சாக மிகுதியில் இருந்த ரஷ்ய வீரர்கள் மேலும் 2 கோல்கள் அடித்து மிரட்டினர்.

முடிவில், 5-0 என்ற கோல்கணக்கில் ரஷ்யா வெற்றிபெற்றது. இப்போட்டியில், மாற்று வீரராக களமிறங்கிய டெனிஸ் செரிஷேவ் இரண்டு கோல்கள் அடித்து நாயகனாக ஜொலித்தார். மேலும், 1930 முதல் நடைபெறும் உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் அணி, தொடக்க ஆட்டத்தில் தோல்வியே சந்தித்ததில்லை என்ற சாதனை தற்போதும் நீடிக்கிறது. அத்துடன், தொடக்க போட்டியில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற 2-வது அணி என்ற சாதனையை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. முன்னதாக, 1934 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இத்தாலி 7-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வெள்ளைப் பூனை ‘அசிலிஸ்’ ரஷ்யா வெற்றிபெறும் என கணித்திருந்தது. அதன், ஆருடம் தற்போது பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories