இன்று முதல் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இருந்து குறைந்தபட்சம் 1000 மருத்துவ மாணவர்களை உருவாக்கும் நோக்குடன் பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


