February 20, 2026, 10:34 PM
27.3 C
Chennai

சுபாஷிதம்: ஒப்பிடக் கூடாதவரோடு ஒப்பிட்டால்?

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

105. ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால்? 

ஸ்லோகம்:

ஹேம்ன: கேதோ ந தாஹேன ச்சேதேன கஷணேன வா |
இதமேவ மஹத்து:கம் யத் குஜ்ஜாசமதோலனம் ||
– ஜெகன்நாத பண்டிதராயர்

பொருள்:

தங்கத்தின் தூய்மையை அறிவதற்கு பல சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள். நெருப்பிலிடுவார்கள். வெட்டுவார்கள். தேய்ப்பார்கள். ஆனாலும் துயரப்படாது. ஆனால் தங்கத்தை எடை பார்ப்பதற்கு தராசில் குண்டுமணியை வைத்து, ‘ஆகா!  சரியாக உள்ளது’ என்று கூறும் போது தங்கம் பெரும் துயரத்தை அடையும்.

விளக்கம்: 

அடித்தாலும் பரவாயில்லை. திட்டினாலும் பரவாயில்லை. ஆனால் ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால் எத்தனை ரோஷம் வரும் என்பதை அறிவோம் அல்லவா?

ஜெகநாத பண்டிதராயர் தங்கத்தின் எண்ண ஓட்டத்தை சமத்காரமாக வெளிப்படுத்தியுள்ள ஸ்லோகம் இது.

இவ்விதம் நாம் யாருடனாவது ஒப்பிட்டு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த சுலோகம் சாமர்த்தியமாக விளக்குகிறது.

ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக வளர்ப்பதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் பல தேர்வுகள் வைப்பார்கள். தண்டிப்பார்கள் கூட. அதற்கு ஒன்றும் வருந்த மாட்டான் மாணவன். ஆனால் அவனை ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டு அவமதித்தால்  மிகவும் வருந்துவான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் இருக்கும். அவனுடைய சுய கௌரவத்தை குறைத்துப் பேசக் கூடாது. அவனை பரிகாசம் செய்யக்கூடாது.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பரிகாசத்தையும் அவமதிப்பையும் சகித்துக் கொள்வது கஷ்டம்.  அதனால் யாரையும் பரிகாசம் செய்யாதே என்கிறது இந்த ஸ்லோகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories