சுபாஷிதம்: ஒப்பிடக் கூடாதவரோடு ஒப்பிட்டால்?

Published:

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

105. ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால்? 

ஸ்லோகம்:

ஹேம்ன: கேதோ ந தாஹேன ச்சேதேன கஷணேன வா |
இதமேவ மஹத்து:கம் யத் குஜ்ஜாசமதோலனம் ||
– ஜெகன்நாத பண்டிதராயர்

பொருள்:

தங்கத்தின் தூய்மையை அறிவதற்கு பல சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள். நெருப்பிலிடுவார்கள். வெட்டுவார்கள். தேய்ப்பார்கள். ஆனாலும் துயரப்படாது. ஆனால் தங்கத்தை எடை பார்ப்பதற்கு தராசில் குண்டுமணியை வைத்து, ‘ஆகா!  சரியாக உள்ளது’ என்று கூறும் போது தங்கம் பெரும் துயரத்தை அடையும்.

விளக்கம்: 

அடித்தாலும் பரவாயில்லை. திட்டினாலும் பரவாயில்லை. ஆனால் ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால் எத்தனை ரோஷம் வரும் என்பதை அறிவோம் அல்லவா?

ஜெகநாத பண்டிதராயர் தங்கத்தின் எண்ண ஓட்டத்தை சமத்காரமாக வெளிப்படுத்தியுள்ள ஸ்லோகம் இது.

இவ்விதம் நாம் யாருடனாவது ஒப்பிட்டு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த சுலோகம் சாமர்த்தியமாக விளக்குகிறது.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக வளர்ப்பதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் பல தேர்வுகள் வைப்பார்கள். தண்டிப்பார்கள் கூட. அதற்கு ஒன்றும் வருந்த மாட்டான் மாணவன். ஆனால் அவனை ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டு அவமதித்தால்  மிகவும் வருந்துவான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் இருக்கும். அவனுடைய சுய கௌரவத்தை குறைத்துப் பேசக் கூடாது. அவனை பரிகாசம் செய்யக்கூடாது.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பரிகாசத்தையும் அவமதிப்பையும் சகித்துக் கொள்வது கஷ்டம்.  அதனால் யாரையும் பரிகாசம் செய்யாதே என்கிறது இந்த ஸ்லோகம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img