கொழும்பு: செல்ஃபி மோகம் ஆட்டிப் படைக்கும் இந்த நவீன காலத்தில், இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் இலங்கை இளைஞர் ஒருவர். இறந்து போன உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்ட அந்த இலங்கை இளைஞரின் எதிர்பார்ப்புக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்தப் படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதிகம் செல்பிகளை எடுத்து வெளியிடுவது அகந்தை அல்லது தாழ்வு மனப்பான்மையையின் வெளிப்பாடு என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உறவினர் சடலத்துடன் செல்ஃபி: இலங்கை இளைஞருக்கு வலுத்த எதிர்ப்பு
Popular Categories


