பாங்காக்:
தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 17 வயது இளம் பெண், குப்பைகளை அள்ளி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தாயின் காலில் விழுந்து தனது நன்றியை செலுத்தியுள்ளார்.
பின்னணியில் குப்பைத் தொட்டிகள் இருக்க, அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தாயின் காலில் தான் பெற்ற அழகிப் பட்டத்துடன் விழுந்து வணங்கி நன்றி கூறினார் கனித்தா மின்ட் பசேங். இந்த புகைப்படம் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
செப்டம்பர் 2015ல் நடைபெற்ற மிஸ் அன்சென்ஸார்ட் நியூஸ் தாய்லாந்து பட்டத்தை வென்ற கனித்தா, பட்டம் வென்றுவிட்ட பிறகும் கூட, தனது சொந்த கிராமத்தில், தாய்கு குப்பைகளை சேகரிப்பதில் உதவி செய்து வருகிறார்.
நாங்கள் இந்த வேலையை செய்வதற்காக பெருமைப்படுகிறோம். இது நேர்மையான பணிதான். நான் வளரும் போது தேவைப்படும் உணவை இந்த பணிதான் எனக்கு வழங்கியது. நான் உயர்கல்வி படித்து முடிக்க இந்த வேலை மூலமாகத்தான் பணம் கிடைத்தது. எனவே, எனது தாய்க்கு நான் இப்போதும் உதவியாக உள்ளேன் என்று கூறுகிறார் கனித்தா.