அடுத்த நாட்டு அதிகாரி பர்சை ஆட்டையப் போட்ட பாகிஸ்தான் செயலாளர்?! சிரிப்பாச் சிரிக்குது உலகம்!

Published:

pak officer kuwait delegation wallet stealing 759 - 2026

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த குவைத் நாட்டின் உயர்மட்டக் குழுவில் இடம்பெற்ற அதிகாரியின் பர்சை பாகிஸ்தானைச் சேர்ந்த செயலாளர் ஒருவர் நைஸாக திருடி தன் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் குவைத் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று, பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்தது. அங்கே பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த சிறிது நேரத்தில், குவைத் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரி ஒருவரின் பர்ஸ்ஸைக் காணவில்லை என அவர் புகார் கூறினார். இதை அடுத்து, பேச்சுவார்த்தை நடந்த அந்த அறைப் பகுதியில் சல்லடை போட்டு அதிகாரிகளும் பணியாளர்களும் தீவிர தேடுதலில் இறங்கினர். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை . இதை அடுத்து அந்தக் கூட்ட அரங்கின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில், பாகிஸ்தான் நிதி அமைச்சக செயலர் அளவில் கிரேட் 20 பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், மேஜையில் இருந்த பர்சை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நைஸாக நகர்ந்து சென்றது தெரிந்தது. அதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அது பாகிஸ்தான் முதலீட்டுத் துறை செயலர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.

அந்தக் காணொளிக் காட்சி:

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img