இன்றைய பஞ்சாங்கம் மே 17 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி~ 4 (17.5.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { *வ்ருஷப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.54 am வரை நவமி பின் தசமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 11.12 pm வரை பூரம் பின் உத்தரம்
யோகம் ~ வ்யாகதம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 5.53
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ தசமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் -17.05.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : நம்பிக்கை மேம்படும்.
பரணி : குழப்பம் நீங்கும்.
கிருத்திகை : நெருக்கம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நன்மையான நாள்.
ரோகிணி : தெளிவு உண்டாகும்.
மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : தெளிவு உண்டாகும்.
புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
உடலில் இருந்துவந்த சோர்வு, களைப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : குழப்பம் விலகும்.
ஆயில்யம் : கலகலப்பான நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : மௌனம் வேண்டும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : தெளிவு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். அமைதி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : கவலைகள் குறையும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் மறையும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : முடிவுகள் கிடைக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் மறையும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : திருப்தியின்மையான நாள்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
உத்திராடம் : குழப்பம் உண்டாகும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : வெற்றிகரமான நாள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ பகà¯à®•à®®à¯ படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. உஙà¯à®•à®³à¯ தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•à®³à¯‡ சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•à®³à¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.