Home ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ஏப். 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஏப். 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஏப்.26- வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

சித்திரை~ 13 (26.4.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 7.26 am வரை த்விதியை பின் திருதியை
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 2.59am வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ வரியான்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.00
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ த்ருதியை  
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் -26.04.2024


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பரணி : தடுமாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


பிடிவாத குணம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : மதிப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். மனதில் புதுமையான சிந்தனை தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடு அதிகரிக்கும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
பூசம் : செலவுகளை தவிர்க்கவும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


மனை சார்ந்த வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரம் : மாற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
சுவாதி : நன்மை உண்டாகும்.
விசாகம் : மனக்கசப்புகள் குறையும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். தொழில் நுட்ப கருவிகளால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுகூலம் ஏற்படும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்களின் வருகையால் சில மாற்றங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சோர்வுகள் குறையும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் வித்தியாசமான சிந்தனை தோன்றும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
சதயம் : ஒத்துழைப்பான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : சுறுசுறுப்பான நாள்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


6 COMMENTS

  1. அருமை. பக்கத்திற்கு பக்கம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. உங்கள் தினசரி வெற்றிபெற வாழ்த்துக்கள். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version