அந்த ஹீரோ பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவர் பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் பிரபல இயக்குநர் படத்தில் நடிகர் நடிக்கவில்லை என்று பேச்சு கிளம்பியது.
படம் கைவிடப்படவில்லை என்று இயக்குநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகரும் அதை உறுதி செய்தார். இதையடுத்து இயக்குநர் படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார்.
மலைப்பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.படம் பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது. அதனால் நூற்றுக்கணக்கான துணை நடிகர்,நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர். இது இப்படியிருக்க அந்த ஹிரோ ஞாயிற்றுக்கிழமைகளில் படபிடிப்பிற்கு வரமாட்டாராம். இயக்குநரிடம் இதை தெரிவித்துள்ளார் நடிகர்.இயக்குனர் இதைக் கேட்டு தலை சுற்றிப் போனாராம்.
ஹீரோ ஞாயிற்றுக்கிழமை நடிக்காவிட்டாலும் துணை நடிகருகளுக்கான செலவை தயாரிப்பாளர் கொடுத்தாக வேண்டும். இது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு ஆகும். நடிகரோ தான் எப்பொழுதுமே ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடித்து வரும் அந்த ஹீரோ ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க அங்கே ஒப்புக் கொண்டுள்ளாராம். இதற்கு முன்பாக காதலை கொண்டாடும் இயக்குநரின் படத்தில் நடித்தபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் நடிகர். அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் சின்சியராக இருந்தது பற்றி அப்பொழுது பெரிதாக பேசப்பட்டது. அந்த இருவருக்காக மட்டும் தனது கொள்கையை தளர்த்தியிருக்கிறார் நடிகர்.
அந்த இருவருக்காக ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்த நீங்கள் கொஞ்சம் எங்களுக்காகவும் அதை செய்யலாமே என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
நடிகரின் முடிவில் தான் படப்பிடிப்பினை துவங்குவாராம் இயக்குநர். தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடிகர் இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவருக்காக தளர்த்தினால் அனைவரும் அதையே கேட்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


