வெளிமாவட்ட மாணவர்கள் இளையவர்களை ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட திரட்டும் வேலையில் நாம் தமிழர் போன்ற கட்சிகள் இன்னும் சில நக்சல் ஆதரவு கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதாக தகவல். இப்படி ஈடுபடும் நபர்கள் வலைத்தளங்கள் மூலமாகவோ, whatsapp போன்ற தளங்கள் வழியாக உங்களை அணுகினால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் புகாரினை தெரிக்கவும். கிருஸ்துமஸ் தாண்டி போராட்டத்தை தீவிரப்படுத்த சில இயக்கங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.
“என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்… கம்யுனிஸ்ட் தீவிரவாத கூட்டமான நக்சல், அதன் ஆதரவாளர்களான அர்பன் நக்சல் பெரும்பாலும் அரசால் , நீதிபதிகளால் நிறுத்த முடியாத திட்டங்களை, நிறுவனங்களை எதிர்த்துத் தான் மக்களிடம் புற்றுநோய் பரவுது , குழந்தை கரு கலையுது என்று வித விதமாக பயத்தை பரப்பி அந்தத் திட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வர்.
இதன் மூலம் மக்களின் எண்ணத்திற்கு எதிராகத் தீர்ப்பு வரும் என்றால் அங்கே மக்களுக்கு நாட்டின் உச்ச நீதிமன்ற நீதியின் மேல் நம்பிக்கையின்மையை விதைக்க முடியும் , மக்களுக்கு நாட்டின் ஆட்சியர்கள் மீது வெறுப்பைப் பரப்ப முடியும் – நாட்டிற்கு எதிரான சிந்தனையை விதைக்க முடியும்”.
இது தான் நாட்டில் கலவரங்களை உருவாக்க அமைதியின்மையை உருவாக்க – நாட்டைத் துண்டாட மிகச் சிறந்த வழி – இங்கே மக்களையே ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறந்த யுக்தியும் இதுவே.
அதாவது நாட்டை துண்டாட ஆயுதங்கள் ஏந்துவதை விட அந்த மக்களையே ஆயுதமாக மாற்றவேண்டும். அதற்கு இதுவே சிறந்த யுக்தி. “புரட்சி”.
எவன் இயற்கை ஆர்வலர் என்று கூறிக்கொண்டு 24 மணி நேரமும் நாட்டிற்கும் , ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்கிறானோ அவனே 99% அர்பன் நக்சல்வாதியாக தான் இருப்பான். தோற்றம் கண்டு ஏமாறாதே. முக்கியமாக இந்த லயோலா , நியூ காலேஜ், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ் , women கிறிஸ்டியன் காலேஜ், ymca காலேஜ், st christophe காலேஜ் என்று ஒரு டஜன் கல்லூரிகள் அதன் மாணவர்கள் உங்கள் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர் இயற்கை ஆர்வலர் என்று வந்தால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். அர்பன் நக்சல் தங்களை இங்கே இருந்து தான் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொள்வர் என்பது அனுபவ உண்மை.
“ரெம்ப நல்லவன் போல இயற்கையை மக்களை காப்பாற்ற வந்த தேவதூதன் போல பேசுவார்கள் உங்கள் கல்லூரி விழாக்களில் வந்து. நம்பாதே”.
ஆக காற்று மாசு , தண்ணீர் மாசு , சுற்றுச் சூழல் நோய் பரவுதல் என்று அனைத்து விதமான வாதங்களையும் போதுமான ஆதாரங்களையும் நீயே தேடி படி – பரப்பப்படும் மீம்ஸ் எல்லாம் உண்மையா என்று ஆய்வு செய். ஆய்வு அறிக்கைகள் கொண்டு தான் தீர்ப்பு எழுத முடியுமே தவிர மீம்ஸ் வைத்து அல்ல.
மாநிலம் அமைதியாக இருக்க , கம்யுனிஸ்ட் நக்சல் தீவிரவாதம் பாதித்த பகுதியாக மாறாமல் இருக்க online police complaint இல்லை Email என்று ஏதாவது ஒருவகையில் இப்படி புரட்சி செய்கிறோம் என்று சமூக வலைத்தளங்களில் ஆட்கள் பிடிக்கும் கூட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தமிழக காவல்துறையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
{இதை நன்கு நினைவில் கொள் :
எப்போலாம் இங்கே தமிழ்நாட்டில் குண்டு வெடிக்குமோ , துப்பாக்கிச் சூடு நடக்குமோ அப்போது எல்லாம் அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் மக்களைப் போராட தூண்டிய சத்தியராஜ் முதல் பாரதிராஜா சீமான் போன்ற எந்தத் தலைவனும் அங்கே இருக்க மாட்டார்கள். அது ராஜீவ் காந்தி படுகொலை ஆரம்பித்து – கடைசியாக நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை இது நிதர்சனமான உண்மை. நமது தலைவர்கள் நேர்மை அப்படி. கவனம் தேவை. }
- மாரிதாஸ்