அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

annamalai sattaiyadi - 2026

உயர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நேரடியானதொரு வேண்டுகோள்!

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

சமீபகாலமாக, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவராக உங்களை நான் உணர்கிறேன். உங்களுடைய நேர்மையான, விவேகமான, தைரியமான நடவடிக்கைகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

உங்களைப் பிடித்த அந்த கணத்திலிருந்து, உங்களுக்கு ஆதரவாக இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் உங்கள் மேல் பற்றுக்கொண்ட ஒரு ரசிகன்!

ஆனால், சமீபத்தில் நீங்கள் விடுத்த, “ஜாதியையும் மதத்தையும் வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்” என்ற வேண்டுகோளைப் படித்தேன்.

உங்கள் உள்மனதில் என்ன நோக்கம் இருக்கிறது என்பது சாதாரண மக்களுக்கு உடனடியாகப் புரிய வாய்ப்பில்லை. அதனால், நீங்கள் விடுத்த இந்த வேண்டுகோளை அவரவர் தங்களுக்குச் சாதகமாக மாற்றி மாற்றி எழுதி வருகிறார்கள். இங்கு எல்லாமே அரசியல்தான் என்பது எங்களைப் போன்ற முதியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நம் நாட்டு சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்து, “ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று அன்று மனம் நொந்து பாடினார் மகாகவி பாரதியார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

நாடு போகும் போக்கைப்பார்த்து மனம் வெதும்பிக் கிடந்த எங்களைப் போன்ற முதியவர்களில், சுதந்திரத்தின் மதிப்பு தெரிந்த நானும் ஒருவன்.

பாரதி பாடிய அந்த “வாராது போல் வந்த மாமணியாய்”, வெகு காலத்திற்குப் பிறகு நமக்குக் கிடைத்த பொக்கிஷமாய் உங்களை நான் நினைத்தேன்; நம் தேசத்தின் விடிவெள்ளி நீங்கள் என்று நம்பினேன். அதனால்தான், என் பாசத்தின் விளைவாக உங்களை உரிமையோடு ஆசீர்வதித்தேன்.

நீங்கள் அரசியல் செய்யுங்கள்; சாதுர்யமான அரசியல் செய்யுங்கள். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் அந்த அரசியலை நாங்களும் ரசிக்கிறோம். ஆனால், அதைச் செய்யும்போது உங்களால் மட்டுமல்ல, யாராலுமே தங்களது ஜாதியையும் மதத்தையும் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வர முடியாது என்பதே நிதர்சனம்!

ஏனென்றால், ஜாதியும் மதமும் நாம் பிறந்த பிறகு தனியே முளைத்த சட்டையோ அல்லது வேறு விதமான அணிகலன்களோ அல்ல. அவை நம்முடன் பிறந்து, நம்முடனேயே வளருகின்ற உணர்வுகள். நாம் பிறந்த பின் ஜாதியும் மதமும் பிறக்கவில்லை; நாம் தான் ஏற்கனவே இருந்த ஜாதிகளிலும் மதங்களிலும் பிறந்திருக்கிறோம்!

பழைய அரசியல்வாதிகளும் புதிய அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியான பரப்புரையைத்தான் செய்கிறார்கள். உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, எல்லா மதத்தவரும் அனைத்து ஜாதியினரும் இருந்தார்கள், பல மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள், எப்போதும் இருப்பார்கள். அதை மாற்றவே முடியாது.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அரசியலில் பேசுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் எத்தனையோ ஆக்கபூர்வமான செயல்களும், முன்னேற்றப் பாதைகளும் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் பேசாமல் விட்டுவிட்டு, எல்லோருமே ஜாதியையும் மதத்தையும் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். இந்த இரண்டையும் பிடித்துக்கொண்டுதான் அரசியலே செய்கிறார்கள். நீங்களும் அதே ஜாதி, மத, இன அரசியலைத்தான் செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

இந்திய நாட்டிலே ஹிந்துவாகப் பிறந்து, தங்கள் குல தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து, நெற்றியில் வைத்த பொட்டை அழிக்கச் சொல்கிறார்கள்; பூணூலை அறுக்கச் சொல்கிறார்கள். மற்ற மதத்தினரைப் பார்த்து இவர்களால் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்க முடியுமா? அல்லது ஹிந்து அல்லாதோரை பொட்டு வைக்கச் சொல்லி வற்புறுத்த முடியுமா? இவர்களால் முடியாது!

ஜாதியையோ மதத்தையோ யாரும் வீட்டில் விட்டுவிட்டு வர முடியாது. ஆனால், மற்ற ஜாதியினரையும் மதத்தவரையும் அவமதிக்கும் தீய குணத்தை வேண்டுமானால் விட்டுவிட்டு வரலாம்!

மண்ணில் ஜாதி, மரத்தில் ஜாதி, கனியில் ஜாதி, பூவில் ஜாதி என்று இயற்கையே பல பிரிவுகளை (வகைகளை) உருவாக்கி வைத்திருக்கிறது. ஜாதிகளை ஒழிக்க முடியாது.

எல்லா மதத்தவரும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்; அதற்கு மதம் என்பது ஒரு கருவி, ஒரு பயண வாகனம். ஆகவே, ஜாதியையும் மதத்தையும் யாராலும் அழிக்க முடியாது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஆகவே, உங்களிடம் என் வேண்டுகோள் இதுதான்: அனைத்து ஜாதியினரையும் மதிக்கும் பண்பை மக்களிடம் வளர்க்கலாம்.

மதங்களையும் ஜாதிகளையும் கடந்து மனிதம் மேலோங்கச் செய்யலாம். மனிதரை மனிதராக நேசிக்கவும் மதிக்கவும் கற்றுத்தர வேண்டும்.

அப்படிப்பட்ட பொதுமையான, ஒற்றுமையான குணத்தை வளர்க்க நீங்களும் முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

எல்லாவித பேதங்களையும் மறந்து மக்கள் ஒன்றாக இணைய மனப்பக்குவம் வேண்டும்.

அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை மக்களிடம் வளர்த்தெடுங்கள். நாம் தெளிவோடு இருப்போம்; மன பேதங்களைக் களைவோம்!

வந்தே மாதரம்! வாழ்க சுதந்திரம்! ஜெய் ஹிந்த்! வாழ்க பாரத மணித்திருநாடு! பாரத மாதாவுக்கு வணக்கம்.

நன்றி,
அன்புடன்,
தமிழ்த்தேனீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories