December 6, 2025, 6:41 AM
23.8 C
Chennai

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்
நடிகை ஸ்ரீ தேவி மறைந்த போது இரத்தத்தில் மது கலந்திருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சற்று மனம் கனத்தது. சிறு குழந்தையில் இருந்து பார்த்த ஸ்ரீ தேவிக்கா இப்படி ஒரு அவலமும், துயரமும் என்ற வேதனை. ஸ்ரீ தேவியின் முகத்தில் எப்போதும் இயல்பாக உள்ளார்ந்த கவலைகளும், வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் தெரியும். துயரமும், இறுக்கமும் அவரின் வாழ்க்கையின் நடைமுறையாக தான் இருந்துள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தன்னிலையை மறக்க, அக, புற நிலையில் மதுவை நாடி இருக்கலாம். மும்பை வாழ்க்கையில் இது சாதாரண விசயமாகும். ஒரு திரை ஆளுமைக்கு இப்படியான ஒரு துயரமான முடிவா?

நன்பர் அறந்தை நாராயணன் அவர்கள், “குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்”என்ற தன்னுடைய நூலில் தமிழ் திரையுலக ஆளுமைகள் குடிப்பழக்கத்தால் பல துயரங்களைச் சந்தித்து, மன அமைதி இழந்து வாழ்வைத் தொலைத்த கதைகளைச் சொல்லியுள்ளார்.

வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதையுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளை பற்றிய நூல். எத்தனையோ அரிய, பெரிய கலைஞர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் மது அருந்தி, உடல் வருந்தி இறந்து போயினர்.

நடிகையர் திலகம் சாவித்திரி, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற ஆளுமைகள் மதுவுக்கு பலியாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்த நிகழ்வுகளை எல்லாம் தமிழகம் கண்டது. அறந்தை நாராயணன் இந்த நூலில் பதிவுச் செய்த சம்பவங்களை எல்லாம் படிக்கும் போது என்ன வாழ்க்கை என்று தோன்றினாலும், பிறந்த வாழ்க்கையை இயன்றளவு மன நிம்மதியோடு வாழக் கற்றுக் கொண்டால் எந்த துயரமும், ரணமும் நம்மைத் தீண்டாது.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோ மகத்தான ஆளுமைகளை மதுக் கோப்பையிடம் நாம் பறி கொடுத்திருக்கிறோம். திரையுலகம் மட்டுமல்ல, மானிட சமுதாயமே மதுவை நாடாமல் தங்கள் வாழ்க்கை தவத்தை நெறிப்படுத்திக் கொண்டால் நாட்டுக்கு நல்லது.

#தமிழ்த்_திரையுலகம்
#குடிப்பழக்கம்
#அறந்தை_நாராயணன்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
27-02-2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories