காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 31): இங்கிலாந்து செல்ல…!

veer savarkkar - 2026

தேச விடுதலைக்காக மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் அவர்களை தான் விரும்பும் விதத்தில் செயலுக்குத் தயார் செய்யும் பணி அவ்வளவு எளிதானது அல்ல என்று இத்தருணத்தில் உணர்ந்த சாவர்க்கர்,

அவர்களுக்குத் தலைமை ஏற்று வழிகாட்டத், தானே இன்னும் சில தகுதிகளைப் பெற வேண்டியிருப்பதாகக் கருதினார்.

அதற்காக இங்கிலாந்து சென்று மேலும் சில வருடங்கள் படித்து பாரிஸ்டர் பட்டம் பெறவும், அங்கு தங்கியிருக்கும் காலத்தில் பாரதம் பற்றிய ஆங்கிலேய அரசின் நோக்கு எப்படி இருக்கிறது என்று ஆய்ந்தறிந்து கொள்ளவும் விரும்பினார்.

ஆகவே இங்கிலாந்து செல்லப் போவதாக அறிவித்தார்.

அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டி,அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யத் தயாராக இருந்த அரசாங்கம்,சாவர்க்கரின் இந்த திடீர் முடிவுக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டது.

‘ அரசுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சாவர்க்கரை பற்றி இனி கவலைக் கொள்ளத் தேவையில்லை; இங்கிலாந்து,அவரை மேற்கத்திய நாகரீகங்களை ஏற்றுக் கொண்ட விட்ட இந்திய கனவானாகத் தயார் செய்து விடுமென நம்பினார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில்,அதுதான் நடைபெறும் நிகழ்வாக இருந்தது.

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தின் முக்கிய கல்லூரிகளில் படிக்கச் செல்வது,மேற்கத்திய உலகை பிரம்மிப்புடன் பார்த்து அந்த சூழ்நிலையின் தாக்கத்தால் பழுப்பு நிற தேகம் கொண்ட ஆங்கிலேயர்களாகவே மாறி விடுவது,

பலர் ஆங்கிலேய பெண்களிடம் காதலில் விழுவது,சிலர் வெள்ளைக்கார மனைவிகளுடன் நாடு திரும்புவது… என்பது ஒரு சர்வ சாதாரண நிகழ்வாகவே இருந்தது.

அந்த பாணிப்படியே சாவர்க்கரும் மார்கரெட் லாரன்ஸ் எனும் ஆங்கிலேய பெண்மணியிடம் காதலில் விழுந்தார். ஆனால் இதைத் தவிர்த்து பார்த்தால் அவர் ஒரு முரட்டுத்தனம் கொண்ட இந்தியராகவே இருந்தார்.

‘ GRAY’S INN ‘ல் சேர்ந்து படித்து,பயிற்சிப் பெற்று நான்கு வருடங்களில் பாரிஸ்டர் பட்டம் பெற்று,வக்கீலாகப் பணிபுரிவதற்கானத் தகுதியை பெற்றார்.

இங்கிலாந்திலிருந்த காலம் முழுவதும் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை விடாது தொடர்ந்தார். ‘ FREE INDIA SOCIETY ‘ எனும் அமைப்பினை தொடங்கி அதனுடைய வாராந்திர கூடுதல்களை வெளிப்படையாகவே நடத்தினார்.

அந்த அமைப்பின் அங்கத்தினர்கள் சிலரை மட்டும் தேர்வு செய்து ஒரு உள் வட்டத்தை உருவாக்கினார். இந்த உள்வட்டத்தினரிடம் அவர் எதிர்பார்த்த ஒரே தகுதி,அவர்களுக்கும் தன்னைப் போலவே புரட்சியில்.. ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது தான்..

( தொடரும் )

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories