காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 47):

godse narayan apte - 2026

கோட்ஸேயும்,ஆப்தேயும் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்தினர். புலனாய்வுத் துறையினர்,தகவல் சேகரிக்க இந்த முகாம்களுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள்.

அங்கே பாரதிய பாரம்பரிய விளையாட்டுக்கள்,உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், சாவர்க்கரின் கொள்கைகள் குறித்த வகுப்புகள் மட்டுமே நடைப்பெற்றதைக் கண்டு தகவல் தெரிவித்தனர். இந்த ‘ தள் ‘ ளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150க்கு மேல் இல்லை எனும் ஆச்சரியமூட்டும் தகவலைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே,ஆப்தே,ராணுவத்தில் ஆட்களைச் சேர்க்கும் பணிக்கு (Recruiting Officer) விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்து 1943ல், இந்திய விமானப் படை ( அப்போது ராயல் இந்திய விமானப் படை ) யில் உதவி தொழிற்நுட்ப பணி நியமன அதிகாரியாக ( Assistant Technical Recruiting Officer ) வேலையில் சேர்ந்தார்.

அரசிதழ் பதிவுப் பெற்ற ( Gazetted ) ஃப்ளைட் லெஃப்டினண்ட் ஆக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பணிப்புரிய வேண்டிய இடம் அவர் விரும்பிய பூனா.

பணி தற்காலிகமானதுதான்,இரண்டாம் உலகப் போர் நீடிக்கும் காலம் வரைதான் என்று கூறப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ராணுவ முத்திரையுடன் கூடிய சீருடை வழங்கப்பட்டது,ராணுவப் பணிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளும் கிடைத்தது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

ஆக,இப்போது அஹமத் நகரும் இல்லை,ஆசிரியர் பணியும் இல்லை. அஹமத் பள்ளியிலிருந்து பிரியா விடை பெற்ற போது,அந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் அவருக்கு கண்ணீர் மல்க விடைக் கொடுத்தனர்.

அவர் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கி,அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சிறு உரையாற்றினார்.

தான் எங்கோ வெகு தூரம் போய் விடப் போவது இல்லை,பக்கத்தில் பூனாவில்தான் இருக்கப் போவதாகவும்,எப்போது வேண்டுமானாலும் தன்னைக் காண வரலாம் என்றும் தெரிவித்தார். சில மாணவ,மாணவிகள் அவருடைய விலாசத்தை கேட்டுப் பெற்றனர்.

அப்படி விலாசத்தை கேட்டுப் பெற்ற மாணவிகளில் ஒருவர் மனோரமா சால்வி. (பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சி ஆனவர் ) சால்விக்கு அப்போது வயது 17.

இந்திய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சார கிறிஸ்துவ குடும்பங்களுக்கே உரிய தினசரி பாடல்கள்,மத சம்பிரதாயங்கள்படி வளர்க்கப்பட்டவர்.

படிப்பில் கெட்டிக்காரி,கூச்ச சுபாவம் கொண்டவர். சற்றே கருமை நிறம், எளிமையானத் தோற்றம்.

மனோரமா சால்வி ஆப்தேயின் விலாசத்தை பத்திரமாகக் குறித்து வைத்திருந்து, ஒரு வருடத்திற்குப் பிறகு,பம்பாயில் கல்லூரி மாணவியாக இருந்த போது, அவருக்கு கடிதம் எழுதினார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதன் பிறகு அவர்கள் பல முறைச் சந்தித்து காலப்போக்கில் காதலர்கள் ஆகி விட்டனர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories