காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 47):

godse narayan apte - 2026

கோட்ஸேயும்,ஆப்தேயும் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்தினர். புலனாய்வுத் துறையினர்,தகவல் சேகரிக்க இந்த முகாம்களுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள்.

அங்கே பாரதிய பாரம்பரிய விளையாட்டுக்கள்,உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், சாவர்க்கரின் கொள்கைகள் குறித்த வகுப்புகள் மட்டுமே நடைப்பெற்றதைக் கண்டு தகவல் தெரிவித்தனர். இந்த ‘ தள் ‘ ளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150க்கு மேல் இல்லை எனும் ஆச்சரியமூட்டும் தகவலைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே,ஆப்தே,ராணுவத்தில் ஆட்களைச் சேர்க்கும் பணிக்கு (Recruiting Officer) விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்து 1943ல், இந்திய விமானப் படை ( அப்போது ராயல் இந்திய விமானப் படை ) யில் உதவி தொழிற்நுட்ப பணி நியமன அதிகாரியாக ( Assistant Technical Recruiting Officer ) வேலையில் சேர்ந்தார்.

அரசிதழ் பதிவுப் பெற்ற ( Gazetted ) ஃப்ளைட் லெஃப்டினண்ட் ஆக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பணிப்புரிய வேண்டிய இடம் அவர் விரும்பிய பூனா.

பணி தற்காலிகமானதுதான்,இரண்டாம் உலகப் போர் நீடிக்கும் காலம் வரைதான் என்று கூறப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ராணுவ முத்திரையுடன் கூடிய சீருடை வழங்கப்பட்டது,ராணுவப் பணிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளும் கிடைத்தது.

ஆக,இப்போது அஹமத் நகரும் இல்லை,ஆசிரியர் பணியும் இல்லை. அஹமத் பள்ளியிலிருந்து பிரியா விடை பெற்ற போது,அந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் அவருக்கு கண்ணீர் மல்க விடைக் கொடுத்தனர்.

அவர் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கி,அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சிறு உரையாற்றினார்.

தான் எங்கோ வெகு தூரம் போய் விடப் போவது இல்லை,பக்கத்தில் பூனாவில்தான் இருக்கப் போவதாகவும்,எப்போது வேண்டுமானாலும் தன்னைக் காண வரலாம் என்றும் தெரிவித்தார். சில மாணவ,மாணவிகள் அவருடைய விலாசத்தை கேட்டுப் பெற்றனர்.

அப்படி விலாசத்தை கேட்டுப் பெற்ற மாணவிகளில் ஒருவர் மனோரமா சால்வி. (பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சி ஆனவர் ) சால்விக்கு அப்போது வயது 17.

இந்திய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சார கிறிஸ்துவ குடும்பங்களுக்கே உரிய தினசரி பாடல்கள்,மத சம்பிரதாயங்கள்படி வளர்க்கப்பட்டவர்.

படிப்பில் கெட்டிக்காரி,கூச்ச சுபாவம் கொண்டவர். சற்றே கருமை நிறம், எளிமையானத் தோற்றம்.

மனோரமா சால்வி ஆப்தேயின் விலாசத்தை பத்திரமாகக் குறித்து வைத்திருந்து, ஒரு வருடத்திற்குப் பிறகு,பம்பாயில் கல்லூரி மாணவியாக இருந்த போது, அவருக்கு கடிதம் எழுதினார்.

அதன் பிறகு அவர்கள் பல முறைச் சந்தித்து காலப்போக்கில் காதலர்கள் ஆகி விட்டனர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories