காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 47):

godse narayan apte - 2026

கோட்ஸேயும்,ஆப்தேயும் தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் பயிற்சி முகாம்களை நடத்தினர். புலனாய்வுத் துறையினர்,தகவல் சேகரிக்க இந்த முகாம்களுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள்.

அங்கே பாரதிய பாரம்பரிய விளையாட்டுக்கள்,உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், சாவர்க்கரின் கொள்கைகள் குறித்த வகுப்புகள் மட்டுமே நடைப்பெற்றதைக் கண்டு தகவல் தெரிவித்தனர். இந்த ‘ தள் ‘ ளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150க்கு மேல் இல்லை எனும் ஆச்சரியமூட்டும் தகவலைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே,ஆப்தே,ராணுவத்தில் ஆட்களைச் சேர்க்கும் பணிக்கு (Recruiting Officer) விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்து 1943ல், இந்திய விமானப் படை ( அப்போது ராயல் இந்திய விமானப் படை ) யில் உதவி தொழிற்நுட்ப பணி நியமன அதிகாரியாக ( Assistant Technical Recruiting Officer ) வேலையில் சேர்ந்தார்.

அரசிதழ் பதிவுப் பெற்ற ( Gazetted ) ஃப்ளைட் லெஃப்டினண்ட் ஆக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பணிப்புரிய வேண்டிய இடம் அவர் விரும்பிய பூனா.

பணி தற்காலிகமானதுதான்,இரண்டாம் உலகப் போர் நீடிக்கும் காலம் வரைதான் என்று கூறப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ராணுவ முத்திரையுடன் கூடிய சீருடை வழங்கப்பட்டது,ராணுவப் பணிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளும் கிடைத்தது.

ஆக,இப்போது அஹமத் நகரும் இல்லை,ஆசிரியர் பணியும் இல்லை. அஹமத் பள்ளியிலிருந்து பிரியா விடை பெற்ற போது,அந்த உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் அவருக்கு கண்ணீர் மல்க விடைக் கொடுத்தனர்.

அவர் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கி,அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சிறு உரையாற்றினார்.

தான் எங்கோ வெகு தூரம் போய் விடப் போவது இல்லை,பக்கத்தில் பூனாவில்தான் இருக்கப் போவதாகவும்,எப்போது வேண்டுமானாலும் தன்னைக் காண வரலாம் என்றும் தெரிவித்தார். சில மாணவ,மாணவிகள் அவருடைய விலாசத்தை கேட்டுப் பெற்றனர்.

அப்படி விலாசத்தை கேட்டுப் பெற்ற மாணவிகளில் ஒருவர் மனோரமா சால்வி. (பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சி ஆனவர் ) சால்விக்கு அப்போது வயது 17.

இந்திய கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சார கிறிஸ்துவ குடும்பங்களுக்கே உரிய தினசரி பாடல்கள்,மத சம்பிரதாயங்கள்படி வளர்க்கப்பட்டவர்.

படிப்பில் கெட்டிக்காரி,கூச்ச சுபாவம் கொண்டவர். சற்றே கருமை நிறம், எளிமையானத் தோற்றம்.

மனோரமா சால்வி ஆப்தேயின் விலாசத்தை பத்திரமாகக் குறித்து வைத்திருந்து, ஒரு வருடத்திற்குப் பிறகு,பம்பாயில் கல்லூரி மாணவியாக இருந்த போது, அவருக்கு கடிதம் எழுதினார்.

அதன் பிறகு அவர்கள் பல முறைச் சந்தித்து காலப்போக்கில் காதலர்கள் ஆகி விட்டனர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories