விக்ரம் லேண்டருக்கு ஹலோ செய்தி அனுப்பிய நாசா!

Published:

dsn deep space network communications antenna pia17793 - 2026

நிலவின் தரைப் பகுதியில் ஹார்ட் லேண்டிங் ஆக, வேகமாக இறங்கி நிலவின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டருடன் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவும் களம் இறங்கி உள்ளது. ஆழ்ந்த விண்வெளி தொடர்பு ஆண்டனாக்கள் மூலம், லேண்டர் விக்ரமிற்கு ‘ஹலோ’ என்ற மெசேஜ் அனுப்பி உள்ளது நாசா.

ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரமைத் தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. இஸ்ரோவின் ஒப்புதலுடன் டிஎஸ்என் எனப்படும் Deep space network மூலம் விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவகிறது நாசா.

செப்.,20, 21 தேதிகளுக்கு இடையில் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆன்டனாக்கள் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு, நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும் அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Listening antenae - 2026

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில் உள்ளது

dsn now - 2026

விக்ரம் லேண்டர் புத்துயிர் பெறுவதற்கான நம்பிக்கை 14 புவி நாட்களுக்கு நமக்கு உள்ளது. விக்ரம் லேண்டர் சூரியனின் கதிர்களைப் பெற்று உயிர்ப்பிப்பது ​​செப்டம்பர் 20-21 தேதிகளில் முடிவடையும்! அதன் பின்னர் அதன் சோலார் பேனலை உயிர்ப்பிக்கும் நம்பிக்கை நம்மைவிட்டுப் போய்விடும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img