திகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது! நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

chidambaram in tihar - 2026

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன நிதி முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை நாடியது அமலாக்கத்துறை!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹார், காலை 8.30 மணிக்குப் பின்னர் திகார் சிறையில், ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்தார். தேவைப்பட்டால் பண மோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19இன் கீழ் சிதம்பரத்தைக் கைது செய்து கொள்ளலாம் என்றும், பொதுவெளியில் கண்ணியக் குறைவாக இல்லாமல் திகார் சிறையில் வைத்து கைது செய்து விசாரிக்கலாம் என்று அனுமதி கொடுக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இணை இயக்குநர் மகேஷ் சர்மா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று காலை திகார் சிறைக்குச் சென்றது. பின்னர் சிறையில் ப.சிதம்பரத்திடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப் பட்டது. விசாரணை முடிவில் அவரை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

chidambaram tihr - 2026

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தில்லி ரோஸ் அவின்யு நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் வைத்து தாங்கள் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அளித்த வாக்குமூலத்தையும் தாங்கள் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம், நாளை ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திஹார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

நாளை மதியம் 3 மணிக்கு ப.சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திஹார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories