December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு: இஸ்ரோ சிவன்!

isro sivan - 2025

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மூலமாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவுபெற்று, அடுத்தகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் நிரப்பும் மையத்தில் நாடு முழுவதுமுள்ள அந்த துறை சார்ந்த விஞ்ஞானிகள் அலுவலர்கள் கலந்துகொண்ட விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் பெங்களூர் செல்லும் வழியில் தூத்துக்குடியில் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2-ல் உள்ள விண்கலம் சிறப்பாக வேலை செய்து வருகிறது. அதனுடைய ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் டேட்டாக்களை நாம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.

தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலமாக வரும் நவம்பர் மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது. அதுமட்டுமன்றி தொடர்ந்து பல செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளன.

தற்போது ராக்கெட்டுகள் கிரையோஜெனிக்,செமி கிரையோஜெனிக் இயந்திரங்கள் மூலம் செலுத்தப் படுகின்றன, வரும் காலங்களில் எலக்ட்ரிக் இயந்திரம் மற்றும் மீத்தேன் மூலமாக இயங்கக்கூடிய இயந்திரங்கள் கொண்டு ராக்கெட் செலுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories