February 22, 2026, 7:48 AM
25.4 C
Chennai

ஆரோக்கிய சேது! ஆப் பினை வைத்து ஆப்பு வைக்க பார்க்கும் பாகிஸ்தான்!

arokiya sethu

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை மற்றும் உதவிகளுக்காக `ஆரோக்கிய சேது’ என்ற மொபைல் செயலியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தச் செயலி மூலம் கொரோனா நோய் பாதிப்புகள் குறித்த துல்லிய மற்றும் அதிகாரபூர்வ தகவல்களைப் பெறமுடியும். இந்த செயலியை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகியவற்றில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் சேவையைக் கொண்டு செயல்படுகிறது. இதை அனைத்துப் பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

miltry

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் ஆரோக்கிய சேது' ஆப்பை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலியை அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் என எல்லோரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தஆரோக்கிய சேது’ செயலியை இந்திய ராணுவத்தினரும் பதிவிறக்கம் செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்புகள் அந்நாட்டு உளவுத்துறையின் உதவியோடு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது' செயலின் பயனர் பயன்பாட்டு கட்டமைப்பைக் கொண்டு அதேஆரோக்கிய சேது’ என்ற பெயரில் மற்றொரு போலி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்தச் செயலியை இந்திய ராணுவத்தினரின் மொபைல்களில் சட்ட விரோதமாக திணித்து அவர்களை உளவு பார்க்கும் வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய ராணுவத்தினரை எச்சரித்துள்ள இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள், “ஆரோக்கிய சேது செயலியை இந்திய அரசின் அதிகாரபூர்வ வலைதளங்கள், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், ஒரு போதும் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் மற்ற இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடையவர்களை ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் முகாம் அமைத்து தங்கவைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது மீண்டும் போலி செயலியின் மூலம் இந்திய ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது இந்திய ராணுவத்தினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அரசின் அதிகாரபூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதுதான் பாதுகாப்பானது. பாகிஸ்தான் வடிவமைத்துள்ள போலி ஆரோக்கிய சேது செயலி இந்திய ராணுவத்தினர் சிலரின் மொபைல்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். மேலும், அதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறை இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இன்னும் எத்தனை பேர் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories