February 21, 2026, 1:46 PM
29.5 C
Chennai

நிரவ் மோடி இங்கே இருப்பதை உறுதி செய்ய முடியவில்லை; கைவிரித்த அமெரிக்கா!

வாஷிங்டன்:

நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறார் என்பதை உறுதி செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளது அமெரிக்கா. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி, நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி, அமெரிக்காவில் தான் இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், அவர் அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக செய்திகள் வெளிவருவதை நாங்கள் அறிவோம். ஆனால், அவர் இங்குதான் இருக்கிறார் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான அளவில் கடன் பெற்று, ஏமாற்றி விட்டுச் சென்றுள்ளார் நிரவ் மோடி. இதை அடுத்து அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, வங்கியின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சிபிஐ., யால் கைது செய்யப் பட்டுள்ளனர். இருப்பினும், நிரவ் மோடி இது குறித்து தகவல் வெளியாகும் முன்பே, குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்தியாவில் இருந்து இந்த வருடத் துவக்கத்தில் அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அவர் கரீபியன் தீவுகளில் ஒன்றில் வீடு வாங்கி, பெருமளவில் நிதி முதலீடு செய்து, குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகளில் அவர் நிரந்தரமாக தங்கிவிடக் கூடும் என்று கூறப் படுகிறது.

இதனிடையே, நிரவ் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில், தாம் விசாரணைக்காக நாடு திரும்ப இயலாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந் நிலையில் நிரவ் மோடி அமெரிக்காவில்தான் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க அரசு கைவிரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories