பசவண்ணர் சிலைக்கு மரியாதை: லண்டனில் மோடி; கர்நாடகாவில் சித்தராமையா!

pasavannar statue modi1 - 2026

புதன் கிழமை இன்று கர்நாடகத்தின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணவரின் ஜயந்தி விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு, லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கே பசவண்ணரின் சிலைக்கு மரியாதை செய்தார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சித்தராமையா, பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவர் அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாட்டு உறவுகள், பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். தொடர்ந்து, லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த தத்துவவாதி பசவேஸ்வரரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினார்.

12ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் லிங்காயத்துகள் எனும் வீர சைவப் பிரிவை போதனை செய்து வந்த தத்துவஞானி பசவேஸ்வரர், சாதி பேதத்தை அறுத்து, சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர். அவரது பிறந்தநாளான இன்று, ஆல்பர்ட் எம்பங்க்மெண்ட் கார்டனில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

pasavannar statue modi - 2026

இதே போல் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆனால், அவரை இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கர்நடாக மாநில பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகே செவ்வாய்கிழமை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தனி மதம் என பிரிவினையை ஏற்படுத்தியுள்ள சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து அவரது ஜயந்தி விழா கொண்டாட அருகதை அற்றவர் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பசவண்ணர் ஜயந்தி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories