பசவண்ணர் சிலைக்கு மரியாதை: லண்டனில் மோடி; கர்நாடகாவில் சித்தராமையா!

pasavannar statue modi1 - 2026

புதன் கிழமை இன்று கர்நாடகத்தின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணவரின் ஜயந்தி விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு, லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கே பசவண்ணரின் சிலைக்கு மரியாதை செய்தார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சித்தராமையா, பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவர் அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாட்டு உறவுகள், பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். தொடர்ந்து, லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த தத்துவவாதி பசவேஸ்வரரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினார்.

12ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் லிங்காயத்துகள் எனும் வீர சைவப் பிரிவை போதனை செய்து வந்த தத்துவஞானி பசவேஸ்வரர், சாதி பேதத்தை அறுத்து, சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர். அவரது பிறந்தநாளான இன்று, ஆல்பர்ட் எம்பங்க்மெண்ட் கார்டனில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

pasavannar statue modi - 2026

இதே போல் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆனால், அவரை இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கர்நடாக மாநில பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகே செவ்வாய்கிழமை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தனி மதம் என பிரிவினையை ஏற்படுத்தியுள்ள சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து அவரது ஜயந்தி விழா கொண்டாட அருகதை அற்றவர் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதில் அளித்திருந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இந்நிலையில் இன்று நடைபெற்ற பசவண்ணர் ஜயந்தி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories