கூலித் தொழிலாளிக்கும் கைகொடுத்த டிஜிட்டல் இந்தியா திட்டம்: வழிகாட்டுகிறார் கேரளாவின் ஸ்ரீநாத்

kerala man digitalindia srinath - 2026

எர்ணாகுளம்: பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளிக்கு முழுமையாகக் கை கொடுத்துள்ளது.

இலவச வைஃபை வசதியின் மூலம் ரயில்வே கூலித் தொழிலாளியாக வேலை செய்த ஸ்ரீநாத், மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீநாத். இவர், கேரள மாநில தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை வசதியின் மூலம் படித்து வந்தார்.

kerala man digitalindia2 - 2026

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல், தன் கையில் உள்ள மொபைல் போனிலேயே, பழைய வினாத்தாள், கேள்விகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வார். பின்னர் வீட்டுக்குச் என்று, ஓய்வு நேரத்தில் அவற்றை விடாமுயற்சியுடன் படித்துள்ளார். இணைய தளங்களில் போட்டித் தேர்வுக்கான ஆடியோ பாடங்களை பதிவிறக்கி, அவற்றை ஓடவிட்டு, சுமை தூக்கிச்செல்லும் போது கூட அவற்றைக் காதில் கேட்டுக் கொண்டு, மனத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ளார்.

இதை அடுத்து அவர் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்று விட்டார். நேர்முகத் தேர்விலும் ஸ்ரீநாத் தேர்ச்சி பெற்றுவிட்டால், நில அளவைத் துறையில் கள உதவியாளர் பணி அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.

ஸ்ரீநாத், மாநிலப் பணிக்கான இந்தத் தேர்வை மட்டுமல்லாமல், ரயில்வே துறை நடத்தவுள்ள குரூப் டி பணிக்கான தேர்வையும் எழுதவுள்ளார். ரயில் நிலைய இலவச வைஃபை மூலம் படித்து ரயில்வே பணியில் அலுவலராக மாறிவிட்டால், நிச்சயம் அவர் ஒரு சாதனை மனிதர்தான்! ஸ்ரீநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் இந்தியா திட்டம் எந்த அளவுக்கு ஏழை எளியவர்களுக்கும் பயன் தருகிறது என்பதையும் சேர்த்தே பதிவு செய்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories