மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

03 Aug13 somnath - 2026இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றபோது, 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டபோது, சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக சோம்நாத் சாட்டர்ஜி வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. ஆனால் சபாநாயகர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறி, சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர் 2008ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, சிறுநீரகக் கோளாறு காரணமாக, கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், சுவாச உதவிக் கருவி பொருத்தி தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையிலேயே சோம்நாத் சாட்டர்ஜியின் உயிர் பிரிந்தது. 89 வயதில் காலமான அந்த முதுபெரும் தலைவருக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலில் நம்பகத்தன்மையும், உறுதியும் மிக்க தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை செழிப்புறச் செய்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் ஓங்கிக் குரல் கொடுத்த அவரது இறப்பால் மிகுந்த வேதனை அடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகராகவும் 10 முறை மக்களவை உறுப்பினராகவும், இருந்த சோம்நாத் சாட்டர்ஜி கட்சி வேறுபாடுகளைக் கடந்து மதித்துப் போற்றப்பட்டவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories