மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

03 Aug13 somnath - 2026இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றபோது, 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டபோது, சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக சோம்நாத் சாட்டர்ஜி வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. ஆனால் சபாநாயகர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறி, சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர் 2008ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, சிறுநீரகக் கோளாறு காரணமாக, கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், சுவாச உதவிக் கருவி பொருத்தி தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையிலேயே சோம்நாத் சாட்டர்ஜியின் உயிர் பிரிந்தது. 89 வயதில் காலமான அந்த முதுபெரும் தலைவருக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலில் நம்பகத்தன்மையும், உறுதியும் மிக்க தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை செழிப்புறச் செய்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் ஓங்கிக் குரல் கொடுத்த அவரது இறப்பால் மிகுந்த வேதனை அடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகராகவும் 10 முறை மக்களவை உறுப்பினராகவும், இருந்த சோம்நாத் சாட்டர்ஜி கட்சி வேறுபாடுகளைக் கடந்து மதித்துப் போற்றப்பட்டவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories