December 5, 2025, 6:43 AM
24.9 C
Chennai

கேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்!

kerala christian sc caste discrimination - 2025

ஆழப்புழ:  ஆழப்புழ மாவட்டத்தில் பள்ளிப்பாடு பகுதியில் உள்ள பள்ளியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கே 23 ஹரிஜன குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடன் தங்க முடியாது என மீதமுள்ள குறிபிட்ட மத குடும்பத்தினர் அங்கே தங்க மறுத்தனர்.

இதை அடுத்து, தாசில்தார் மாற்று ஏற்பாடு செய்ததால், அவர்கள் வேறு இடத்திற்கு மாறி சென்றுள்ளனர்! இதுகுறித்த செய்தி வெளியானதும், மாவட்ட
ஆட்சியர் சுஹாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஹாஸ், தாசில்தார் கார்த்திகபள்ளி மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி இருவரையும் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த 23 ஹரிஜன குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் அனைத்து கேரள புலையர் மகாசபா மூலம் முதல்வர் பிணரயி விஜயனுக்கு, மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு புகார் அனுப்பினர். அதில், அஞ்சிமூடு எல்.பி. பள்ளியில் செயல்பட்ட நிவாரண முகாமில் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று முரண்டு பிடித்ததாகக் கூறியுள்ளனர்.

அந்தக் குடும்பங்களில் ஒருவரான டினு விஜயன், இந்தச் சம்ப்வம் குறித்து கூறிய போது, கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த 27குடும்பங்கள் அங்கே வந்தனர். அவர்கள் சனிக்கிழமை அன்று, தலித் சமூகத்தவரால் சேர்ந்து தயாரிக்கப் படும் உணவை ஏற்க மாட்டோம் எனக் கூறினர். மேலும், தலித் சமூகத்தவருடன் இடத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம், உடன் தங்க மாட்டோம் என்று கூறி, வேறு இடம் கேட்டனர். அதன்படி, அவர்கள் வேறு முகாமுக்கு மாற்றப் பட்டனர்.

நாங்கள் ஜூலை 18 ஆம் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து இந்த நிவாரண முகாமுக்கு வந்தோம். அச்சங்கோவில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு எங்கள் வீடுகள் மூழ்கின.. இந்த முகாமில் 23 தலித் குடும்பங்களும் 28 கிறிஸ்துவ குடும்பங்களும் தங்க வந்தோம். அப்போது கிறிஸ்துவ குடும்பத்தினர், எங்களிடம் தாங்களே தனியாக உணவு சமைத்து உண்பதாகவும், உணவுப் பொருள்களை மட்டும் தனியாகக் கொடுத்துவிடும் படியும் கூறினர். ஆனால், ஒரு முகாமுக்கு கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை தனித்தனியாகப் பிரிப்பது சரியல்ல என்று நாங்கள் கூறினோம். ஆனால் அவர்கள் போலீஸில், நாங்கள் அவர்கள் குடும்பத்துப் பெண்களிடம் தவறாக நடப்பதாக புகார் தெரிவித்தனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து வேறு முகாமுக்கு சனிக்கிழமை முதல் மாற்றப் பட்டனர். இது எங்கள் சமூகத்துக்கு கொடுக்கப் பட்ட மிகப் பெரிய அவமதிப்பு.. என்று கூறினார்.

ஆனால், கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், “அந்தப் பள்ளி முகாமில் தங்கியிருந்த எங்கள் சமூகப் பெண்களை அவர்கள் வீடியோ எடுத்தார்கள். நாங்கள் கேள்வி கேட்டோம். சண்டை ஏற்பட்டது. அதனால் வேறு முகாமுக்கு மாறினோம்” என்று கூறினார்.

இந்தப் பிரச்னை இப்போது பெரிதான நிலையில், ஹிந்து ஐக்ய வேதி உறுப்பினர்கள், அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஷ்ரேயஸ் எஸ். நம்பூதிரி தலைமையில் முகாமுக்குச் சென்று பார்வையிட்டு தலித் குடும்பத்தினருடன் சேர்ந்து முகாம் உணவை ஏற்க மறுத்ததற்காக போராட்டம் நடத்தினார்.

இந்த விவகாரம் கேரளத்தில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories