March 27, 2025, 7:45 PM
28.9 C
Chennai

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு நபர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்க்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

கேரள அரசு தலைமைச் செயலர் டாம் ஜோஸ் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் ஆகஸ்டு 15ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் என்றும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் துணைக் குழு நேற்று கூடியதாகவும், நீர்மட்டத்தை 139.99 அடியாக பராமரிக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, முல்லைப் பெரியாறு அணையில், 139.99 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரிடர் மேலாண்மை என்ற வரம்புக்குள் நின்றே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், கேரளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டே அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இதை அடுத்து இந்த வழக்கின்  விசாரணை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories