February 20, 2026, 11:03 PM
26.7 C
Chennai

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

04 July20 Mullai periyaar - 2026

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு நபர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்க்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

கேரள அரசு தலைமைச் செயலர் டாம் ஜோஸ் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் ஆகஸ்டு 15ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் என்றும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் துணைக் குழு நேற்று கூடியதாகவும், நீர்மட்டத்தை 139.99 அடியாக பராமரிக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, முல்லைப் பெரியாறு அணையில், 139.99 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரிடர் மேலாண்மை என்ற வரம்புக்குள் நின்றே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், கேரளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டே அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இதை அடுத்து இந்த வழக்கின்  விசாரணை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories