பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!

sabarimalai lady - 2026
சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் மாதவி , பத்தனம்திட்டையில் தடுத்து நிறுத்தப் பட்டார்…

பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கடந்த ஓரிரு நாட்களாக, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்கள், தங்கள் கண்காணிப்புப் பணியை பலப்படுத்தி வருகின்றனர். இதற்காக, இன்று ஐப்பசி மாதப் பிறப்பு பூஜைக்காக, நடை திறக்கப் பட்டு, சந்நிதி மூடப்படும் ஐந்து நாட்களும் இரவு பகலாக விழித்திருந்து, சபரிமலையைக் காக்கப் போவதாகவும், சபரிமலையின் புனிதம் கெட அனுமதியோம் என்றும் கூறி பலரும் சாலைகளில் பேருந்துகளை சோதனையிட்டு வருகின்றனர்.

நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லாமல் தடுக்கும் வகையில், நிலக்கலில் பெண் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வாகனங்களை சோதனை செய்து, அதில் இருந்த பெண்களை இறக்கி விட்டதாக 8 பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது உடைய பெண்கள் செல்லக் கூடாது என பல்லாண்டுகளாக தடை உள்ளது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சென்று தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்து போராடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக, இந்து அமைப்புகள், காங்கிரஸ் கட்சியினர் என பலரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories