February 20, 2026, 2:44 AM
25.4 C
Chennai

பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!

sabarimalai lady - 2026
சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் மாதவி , பத்தனம்திட்டையில் தடுத்து நிறுத்தப் பட்டார்…

பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கடந்த ஓரிரு நாட்களாக, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்கள், தங்கள் கண்காணிப்புப் பணியை பலப்படுத்தி வருகின்றனர். இதற்காக, இன்று ஐப்பசி மாதப் பிறப்பு பூஜைக்காக, நடை திறக்கப் பட்டு, சந்நிதி மூடப்படும் ஐந்து நாட்களும் இரவு பகலாக விழித்திருந்து, சபரிமலையைக் காக்கப் போவதாகவும், சபரிமலையின் புனிதம் கெட அனுமதியோம் என்றும் கூறி பலரும் சாலைகளில் பேருந்துகளை சோதனையிட்டு வருகின்றனர்.

நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லாமல் தடுக்கும் வகையில், நிலக்கலில் பெண் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வாகனங்களை சோதனை செய்து, அதில் இருந்த பெண்களை இறக்கி விட்டதாக 8 பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது உடைய பெண்கள் செல்லக் கூடாது என பல்லாண்டுகளாக தடை உள்ளது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சென்று தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்து போராடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக, இந்து அமைப்புகள், காங்கிரஸ் கட்சியினர் என பலரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories