December 5, 2025, 6:15 PM
26.7 C
Chennai

ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது: மோடி வாழ்த்து!

gslv - 2025

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (‘இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 ராக்கெட் மூலம் மாலை 5:08க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

gslv mkIII d2 gsat29 - 2025

சென்னையை புயல் தாக்கும், வானிலை மோசமாக இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப் படும் என்று கூறியிருந்தது இஸ்ரோ. அதன்படி, இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன், செவ்வாய்க்கிழமை நேற்று மதியம் 2:50க்கு தொடங்கியது.

ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். 3423 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட் 29 உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன் விண்கலத்திலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3 ஆணடுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சேவை வழங்கப்பட உள்ளது.

சுதந்திர தினத்தன்று கங்கயான் திட்டத்தை அறிவித்து பிரதமர் நமக்குப் பெரிய பரிசு வழங்கினார். இதற்கான குழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பணிகள் நடந்து வருகின்றன. 2020 டிசம்பருக்குள் கங்கயான் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான முழுத் திறனும் இஸ்ரோவுக்கு உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

இந்நிலையில், ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்த போது, ஜிசாட் 29 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாகனம் மூலம், பெரிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக பிரிக்கப் பட்டது:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்3 டி2 ராக்கெட், ஜிசாட் 29ஐ வெற்றிகரமாக சுமந்து சென்றது. ஏவப்பட்ட 17 நிமிடங்கள் கழித்து, ஏவு வாகனம் ஜிசாட் செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் வெளியே செலுத்தியது. ஹசனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப் பட்டு வருகிறது… என்று இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories