ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது: மோடி வாழ்த்து!

gslv - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (‘இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 ராக்கெட் மூலம் மாலை 5:08க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

gslv mkIII d2 gsat29 - 2026

சென்னையை புயல் தாக்கும், வானிலை மோசமாக இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப் படும் என்று கூறியிருந்தது இஸ்ரோ. அதன்படி, இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன், செவ்வாய்க்கிழமை நேற்று மதியம் 2:50க்கு தொடங்கியது.

ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். 3423 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட் 29 உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன் விண்கலத்திலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3 ஆணடுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சேவை வழங்கப்பட உள்ளது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

சுதந்திர தினத்தன்று கங்கயான் திட்டத்தை அறிவித்து பிரதமர் நமக்குப் பெரிய பரிசு வழங்கினார். இதற்கான குழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பணிகள் நடந்து வருகின்றன. 2020 டிசம்பருக்குள் கங்கயான் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான முழுத் திறனும் இஸ்ரோவுக்கு உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

இந்நிலையில், ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்த போது, ஜிசாட் 29 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாகனம் மூலம், பெரிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக பிரிக்கப் பட்டது:

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்3 டி2 ராக்கெட், ஜிசாட் 29ஐ வெற்றிகரமாக சுமந்து சென்றது. ஏவப்பட்ட 17 நிமிடங்கள் கழித்து, ஏவு வாகனம் ஜிசாட் செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் வெளியே செலுத்தியது. ஹசனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப் பட்டு வருகிறது… என்று இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories