காங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை ராகுல் காந்தியே உறுதி செய்வார்: யோகி ஆதித்யநாத்

yogi adityanath - 2026

தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதால் ராகுல் பிரசாரத்தை காங்கிரஸ் வேட்பாளர்களே விரும்புவதில்லை என யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.

பிகானேர்: ராகுல்காந்தி என்றாலே தோல்வியை உறுதி செய்பவர் என்று ஆகிவிட்டது என்று உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு பாஜக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது சுரு மாவட்டத்தில் உள்ள ரதன்கர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியபோது ராகுலை கடுமையாக கேலி செய்தார்.

யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தில் பேசியவை…

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், எங்கெல்லாம் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யச் செல்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளனர். எனவே தங்கள் தொகுதியில் எந்தவொரு காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தங்கள் சொந்தக் கட்சியின் தலைவரான ராகுல் பிரசாரம் செய்வதை விரும்புவதில்லை.

எங்கெல்லாம் ராகுல் செல்கிறாரோ அங்கெல்லாம் அவர் தோல்வியை உறுதி செய்கிறார். ராகுல் என்றாலே தோல்விதான்! காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அக்கட்சிக்கு சரியான தலைமை கிடையாது என்று பேசினார்.

மேலும், பாஜக.,மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ எங்கு ஆட்சியில் இருந்தாலும், அங்கே பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே வளர்ச்சி நடவடிக்கைகள் எடுப்பதில் பாஜக-வுக்கு மாற்று கிடையாது.

தற்போது பாஜக வந்த பிறகு உத்தரப் பிரதேசம் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது நன்றாக வெளித் தெரிகிறது. ராஜஸ்தானில் ராஜே அரசும் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது. 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளால் மேலும் பல வேலைவாய்ப்புகள், பணிகள் தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பாஜக.வுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார் யோகி ஆதித்யநாத்.

இந்தத் தொகுதியில் 2.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கே மும்முனைப் போட்டி நடக்கிறது. முன்னாள் பாஜக.,வுக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா சுயேட்சையாக போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் பாஜக., 11 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியது. அவர்களில் ரின்வாவும் ஒருவர். ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

Topics

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories