tharkolai 1 - 2026ஹைதராபாத்தில் வசித்து வரும் லிங்கா என்பவரின் மகள் விஜயா வயது 21 இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்காக விடுதியில் தங்கி பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்ததால் விஜயா தனது சொந்த ஊருக்கு பெற்றோர்களைக் காண வந்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து  விஜயா தனது அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் விஜயா தனது அறையை விட்டு வெளியே வராத நிலையில் அவரது அம்மா அவரது அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கதவைத் தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.tharkolai1 1 - 2026இந்நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது விஜயா தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விஜயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

மற்றும் இந்த தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர் இதையடுத்து விஜயாவின் செல்போனை பார்த்தபோது இறுதியாக இரவு 8 மணி அளவில் அவரது சகோதரர் ராகுல் என்பவர் போன் செய்திருக்கிறார்.

அவருடன் நீண்ட நேரம் விஜயா பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? மற்றும் காதல் விவகாரமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending