நடிகர் ரஜினிகாந்த், அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாக வெளியான செய்திகளுக்கு நக்கலாக மறைமுகமாக டிவிட் போட்டுள்ளார் ராமதாஸ்.
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தனது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. தற்பொழுது கமல்ஹாசனும் இவரது ஆலோசனையின் படியே நடக்கிறார்.
இதுக்குறித்து பாமக தலைவர் ராமாதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்றைய உரையாடலின் தொடர்ச்சியாக ”அண்ணே….பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?”; ”இல்லப்பா அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன் என பதிவிட்டிருந்தார்.
ஒரு உரையாடல்:
— Dr S RAMADOSS (@drramadoss) September 24, 2019
‘‘அண்ணே… எங்கண்ணே போறீங்க?’’
‘‘ அட… அது ஒன்னும் இல்லப்பா…. இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்’’
நேற்றைய உரையாடலின் தொடர்ச்சி….
— Dr S RAMADOSS (@drramadoss) September 25, 2019
‘‘ அண்ணே…. பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?’’
‘‘ இல்லப்பா…. அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்’’