நாடு திரும்பிய எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு! ரூ. 8 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளதாம்!

edappadi palanisamy - 2026

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர், தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திற்கு தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக ஆக.28ஆம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு, கூட்டங்களில் பங்கு கொண்டு, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்துப் பேசினார்.

அந்தக் கூட்டங்களின் போது, அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, கௌரவப் படுத்தினர். அப்போது அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்த விவரங்களை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் பதிவு செய்தார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி, தமது சுற்றுப் பயணத்தின் விளைவாக, தாம் தொழில் முனைவோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ரூ. 8,835 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கலப்பினப் பசுக்களை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், இன்னும் உங்களது வெளிநாட்டுப் பயணங்கள் தொடருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நிச்சயமாக என்றார்.

வருங்காலத்தில், தண்ணீர் சிக்கனம் குறித்து அறிந்து கொள்ள இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருப்பதாகக் கூறினார்.

மேலும், அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் உள்ளது. கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்க்கு வர உள்ளன.

கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கபட்டுள்ளது. 40 க்கும் மேற்ப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது . வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது ~ தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories